Kanyakumari

News September 29, 2024

கடலில் தத்தளித்த மீனவர்கள் அக்.1ல் கொச்சி வருகை

image

இந்திய ஓமன் கடல் எல்லையில் தத்தளித்த 12 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையின் உதவியுடன் Kyla Fortune என்கிற சாக்கு கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 12 மீனவர்களும் அக்.1ஆம் தேதி கொச்சின் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்தடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய கடலோர காவற்படை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் இன்று (செப்.29) தெரிவித்துள்ளது.

News September 29, 2024

குமரியில் குறையும் பேரூராட்சி, ஊராட்சிகளின் எண்ணிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 6 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால் ஊராட்சிகளின் எண்ணிக்கை 89ஆக குறைகிறது. மேலும் சில ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல நகராட்சிகளுடன் 6 பேரூராட்சிகளை இணைப்பதால் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 55ல் இருந்து 49ஆக குறைகிறது.

News September 29, 2024

நவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் வருகை

image

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னிதித்த நங்கை அம்மன் விக்ரகம் நாளை காவல்துறை அணிவகுப்பு மரியாதை உடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று (செப்.29) இரவு கன்னியாகுமரி வருகை தர இருக்கிறார். பின்னர் நாளை சுசீந்திரத்தில் நடைபெறும் விக்கிரக புறப்பாடு ஊர்வலத்தில் சுரேஷ் கோபி கலந்து கொள்கிறார்.

News September 29, 2024

குமரி மாவட்டத்தில் 304 கடைகளின் உரிமம் ரத்து

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் போலீசாரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாவட்டத்தில் 304 கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (செப்.28) தெரிவித்தனர்.

News September 29, 2024

குமரியில் இரண்டு ஏக்கர் பரப்பில் சிறிய ஜவுளி பூங்கா

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “குமரியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற் கூடங்கள் அமைக்கப்பட இருக்கிறது” என கூறியுள்ளார். இது தொடர்பாக வருகிற 15-ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

குமரி மாவட்டத்தில் 50 பேர் கண் தானம் செய்ய பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் தானம் செய்வதற்கு இந்த ஆண்டு மட்டும் 50 பேர் பதிவு செய்துள்ளனர். இறந்தவர்கள் கண் தானம் செய்வது தொடர்பாக பதிவு செய்திருந்தாலும் கூட, சில சமயங்களில் அவர்களின் உறவினர்கள் எதற்கு ஒத்துழைப்பதில்லை. மேலும் இறப்பு குறித்து நீண்ட நேரத்துக்கு பிறகு தகவல் தெரிவிப்பது போன்ற காரணங்களினால், கண் தானம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது என டாக்டர் பீனா நேற்று கூறினார்.

News September 29, 2024

ஏடிஎம் ஐ உடைத்தது ஏன்? கைதான வாலிபர் விளக்கம்

image

குளச்சல் பகுதியில் ஏடி.எம்-ஐ உடைத்து கொள்ளை அடிக்க முடிந்த அசாமி சேர்ந்த சம்சுல் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினரை பார்க்க வந்ததாகவும், அவருடன் சண்டை போட்டுவிட்டு அறையை காலி செய்து செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் ஐ உடைத்து பணத்தை எடுக்க முயன்றதாகவும் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்

News September 29, 2024

நாகர்கோவிலில் முதியோர் தடகளப்போட்டி

image

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதியோர் தடகளப் போட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், “கலந்துகொள்ள அனுமதி இலவசம்; பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்; 30 வயது முதல் 100 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்” என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

புகையிலைப் பொருட்கள் விற்றவர்களுக்கு அபராதம்

image

குமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக தடுக்க காவல்துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் புகையிலை விற்பனை செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், 47 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

News September 29, 2024

அணுக்கனிம திட்டத்தை கைவிட வேண்டும் – அன்புமணி

image

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மணவாளாக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் IREக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருளுக்காக இனயம், ஏழுதேசம் உட்பட்ட பகுதியில் 1144 ஏக்கர் பரப்பில் சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.  ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!