Kanyakumari

News September 13, 2024

விநாயகர் சிலை ஊர்வலத்தில் சீருடையுடன் கேமரா: SP ஆய்வு

image

குமரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் காவல் அதிகாரிகளுக்கு சீருடையில் பொருத்த 400 கேமராக்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த கேமராக்கள் மூலம் ஊர்வலம் மற்றும் சிலை கரைக்கப்படும் இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் உரையாடல்கள் வீடியோ பதிவு செய்யப்படும். இதன் செயல்பாடுகள் குறித்து இன்று(செப்.12) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

News September 12, 2024

ஒளி வெள்ளத்தில் மிளிர தயாராகும் குமரி ரவுண்டானா

image

கன்னியாகுமரி – காஷ்மீர் தங்க நாற்கர சாலையில் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் ரூ.5லட்சம் செலவில் 95 அடி உயர உயர் கோபுரமின் விளக்கு அமைக்கும் பணி இன்று(செப்.12) நடந்தது. இதற்காக ராட்சதகிரேன் மூலம் உயிர் கோபுரம் மின்கம்பம் தூக்கி நிறுத்தப்பட்டது. விரைவில் இந்த ரவுண்டானா சந்திப்பில் உயர் கோபுரம் மின்விளக்கு எரிய தொடங்கும் அதன் பிறகு இருள் சூழ்ந்த ரவுண்டனர் சந்திப்பு ஒளிவெள்ளத்தில் மிளிரும்.

News September 12, 2024

ஜனாதிபதியிடம் விருது பெற்ற குமரி பெண்ணுக்கு வாழ்த்து

image

இந்திய ராணுவத்தில் முதல் பெண் மேஜர் ஜெனரலான குமரி மாவட்டத்தை சேர்ந்த டெலஸ் புளோராவுக்கு மற்றுமொரு மகுடமாய், ‘தேசிய ஃபளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி உள்ளார். இதையடுத்து, முன்னாள் அமைச்சரும் தி.மு.க. தணிக்கைகுழு உறுப்பினருமான சுரேஷ்ராஜன் மாவட்ட மக்களின் சார்பிலும், தனது சார்பிலும் இன்று(செப்.,12) வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

குமரியில் 26 டாக்டர் பணியிடங்கள் காலி

image

குமரி மாவட்டத்தில் 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 26 டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் 8 பேர் விடுப்பில் உள்ளனர். இடைக்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பணியிடத்துக்கு மாற்று மருத்துவர் அனுப்பி வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி நேற்று (செப்.11) தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

குமரியில் ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு முகாம்

image

குமரி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்க்கு ஆட்கள் தேர்வு முகாம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. குமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108 அவசர ஊர்திக்கு ஆள் சேர்ப்பு முகாம் தக்கலை அரசு தலைமை மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. SHARE IT.

News September 12, 2024

குமரி மாவட்டத்தில் மழை – வானிலை தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (செப்.12) காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையினால் தண்ணீர் பல பகுதிகளில் தேங்க வாய்ப்புள்ளதாகவும், சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் சிறிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News September 12, 2024

குமரியில் உணவு திருவிழா – ஆட்சியர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 9 வட்டாரங்கள் மற்றும் 95 கிராம ஊராட்சிகளிலும் உணவுத் திருவிழா
ஊராட்சி அளவிலான போட்டிகள் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அந்தந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும், வட்டார அளவிலான போட்டிகள் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அந்தந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களிலும் நடைபெறுகிறது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (செப்.11) தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

மறியலில் ஈடுபட முயன்ற MLA தாரகையால் பரபரப்பு

image

குமரி மாவட்டம் மருதங்கோடு பகுதி சர்வோதய சங்கத்தில் இருந்த மகாத்மா காந்தி உருவ சிலையின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கபட்டது. இதை கண்டித்து நேற்று(செப்.,11) மாலை பொதுமக்கள் மற்றும் காங்., தொண்டர்களுடன் கழுவன்திட்டை சந்திப்பில் விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் மறியலில் ஈடுபட முற்பட்டார். அப்போது போலீசார், 2 தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்து போராட்டத்தை தடுத்தனர்.

News September 12, 2024

குமரியில் 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

image

குமரி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுப்படி போலீஸ் டி.எஸ்.பி. மகேஷ்குமார் மேற்பார்வையில் 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் இருசக்கரவாகனங்களை ஓட்டி வந்ததால் 9 இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை வழங்கப்பட்டது.

News September 11, 2024

காதலியின் தம்பி தங்கைக்கு கத்திக் குத்து

image

குமரி மாவட்டம் குறும்பனையை சேர்ந்த வாலிபர் ஜினு என்பவர் அதே ஊரை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வரவே, காதலி வீட்டுக்கு சென்ற ஜினு காதலியின் தம்பி தங்கையை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. திருமணம் செய்ய சம்மத கடிதம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரையும் அவரது சகோதரரையும் குளச்சல் போலீசார் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!