Kanyakumari

News September 13, 2024

விநாயகர் சிலை ஊர்வலம்: CCTV பொருத்தம்

image

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்பேரில் தற்காலிகமாக சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் இன்று(செப்.,13) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

News September 13, 2024

குமரியில் இரண்டு நாள் டாஸ்மாக் இயங்காது

image

விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 14.09.2024 மற்றும் 15.09.2024 ஆகிய தினங்களில் வினாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது. இப்பகுதியிலுள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் FL உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை மேற்படி வினாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடியும் வரை செயல்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

குமரி மாவட்டத்தில் 1300 ரேஷன் கார்டுகள் அச்சடிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக 5964 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 4180 மனுக்கள் விசாரணை செய்யப்பட்டு, முடிக்கப்பட்டுள்ளது. இதில் 1300 குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன மீதமுள்ள குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது இம்மாத இறுதிக்குள் இந்த பணி முடிவடையும். பின்னர் அவை உரிய நபர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்

News September 13, 2024

குமரி மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 646 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 223 கன அடியும், சிற்றாறு 1 அணைக்கு 126  கனஅடியும், சிற்றாறு  2  அணைக்கு 5 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கனஅடி நீரும், சிற்றாறு 1 அணையில் இருந்து 150 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

News September 13, 2024

குமரியில் குறைந்த மதிப்பு பத்திரங்களுக்கு தட்டுப்பாடு

image

குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாத காலமாக ரூ.5, 10, 20, 50 மதிப்பிலான முத்திரை பத்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு  நிலவுகிறது. இதனால் மக்கள் பல்வேறு தேவைகளுக்காக குறைந்த மதிப்பிலான பத்திரங்கள் இல்லாததால் ரூ.100 மதிப்பிலான பத்திரங்கள் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்த விலைமதிப்பிலான பத்திரங்கள் கிடைக்க பத்திரப்பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 13, 2024

ரேஷன் கார்டு குறைகளை களைய சிறப்பு முகாம்

image

பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் 14.09.2024 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

நாகர்கோவிலில் செய்தியாளர் கீழே விழுந்து உயிரிழப்பு

image

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர் சுபாஷ் (52). செய்தியாளரான இவர் நேற்று (செப் 12) வீட்டில் இருக்கும் போது திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த, கோட்டாறு போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 13, 2024

ரேஷன் கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டாஸ் – கலெக்டர்

image

பொது விநியோக திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ,“கடந்த மாதம் 45 பொது விநியோக திட்ட கடத்தல் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவறான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகிப்பது தடுக்கப்படவேண்டும். தொடர்ந்து ரேஷன் பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்” என எச்சரிக்கை விடுத்தார்

News September 13, 2024

குமரியில் வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு

image

கடந்த மாதம் மதுரை நீதிமன்ற குடும்ப நல கோர்டில் கவுன்சலிங் நடத்த சென்ற வக்கீல்கள் பாலமுருகன், குமரன் ஆகியோரை திருப்பதி என்பவர் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். வக்கீல்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய போலீசாரை வலியுறுத்தி இன்று (செப்.13) ஒருநாள் நீதிமன்ற பணிகளை புறக்கணிக்கப்பதாக பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க துணைத் தலைவர் ஏசுராஜா தெரிவித்தார்.

News September 13, 2024

“லேபர் காண்ட்ராக்ட்க்கு குடும்பத்திட்டம் இல்லை”

image

குமரி மாவட்டம் அரசு கழகத்தில் தொழிலாளர்களை லேபர் காண்ட்ராக்ட் விடும் திட்டம் இல்லை என அரசு ரப்பர் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மலையோர விவசாயிகள் சங்கத் தலைவர் ஜீனோ அரசு ரப்பர் கழகத்துக்கு தொழிலாளர்களை லேபர் காண்ட்ராக்ட்டுக்கு விடக் கூடாது என எழுதிய கடிதத்திற்கு ரப்பர் கழக நிர்வாகம் இவ்வாறு பதில் அளித்துள்ளது.

error: Content is protected !!