Kanyakumari

News September 15, 2024

குமரி: இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கிய கட்டுவிரியன்

image

குமரி மாவட்டம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கியுள்ளது. அவர் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு 5-அடி நீள கட்டு விரியன் வகை என கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து பாம்பை லாவகமாக பிடித்த வீரர்கள் பாம்பை சாக்கு மூட்டையில் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.

News September 14, 2024

குமரியில் குரூப் 2 தேர்வு – 5750 பேர் தேர்வு எழுதவில்லை

image

அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட 45 தேர்வு மையங்களிலும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட 27 தேர்வு மையங்களிலும் 14,585 பேர் தேர்வு எழுதினார்கள். குறிப்பாக நாகர்கோவில் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 9,970 நபர்களும், விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 4,815 நபர்களும் தேர்வு எழுதினார்கள். 5750 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா பார்வையிட்டார்.

News September 14, 2024

குமரி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 579 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 168 கன அடியும் சிற்றாறு ஒன்று அணைக்கு 136 கன அடி தண்ணீரும் கொண்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 பெருஞ்சாணி அணையில் இருந்து 410 சிற்றாறு ஒன்று அணையில் இருந்து 150கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 659 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 223 கனஅடியும் நேற்று தண்ணீர் வந்தது.

News September 14, 2024

குமரியில் செப்.17 டாஸ்மாக் கடைகள் மூடல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா நேற்று(செப்.13) விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
வருகிற செப்டம்பர் 17ம் தேதி மீலாடி நபியையொட்டி அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

விஜய் வசந்த் எம்பி ஓண வாழ்த்து

image

குமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் ஓணம் பண்டிகை ஒட்டி மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஓணப்பண்டிகையை அவர்கள் சிறப்பாக கொண்டாட வாழ்த்து தெரிவித்துள்ள அவர் மலையாளம் மொழி பேசும் மக்கள் எந்தவித இன்னலும் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற இறைவனை வேண்டுவதாக அதில் தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

குமரியில் விவசாய அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

image

குமரி மாவட்ட உழவர் சந்தையில் பசுமையான, புதிய தரமான சத்தான காய்கறிகள், பழங்கள் தினந்தோறும் கிடைப்பதால் ஊட்டச்சத்து தன்னிறைவிற்கு உழவர் சந்தை வழிவகை செய்கிறது. இந்நிலையில், உழவர் சந்தையில் விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தினை வடசேரி மற்றும் மைலாடி உழவர்சந்தையில் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(செப்.13) கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 14, 2024

விநாயகர் சிலை ஊர்வலம்: போக்குவரத்து மாற்றம்

image

நாகர்கோவிலில் செப்.,14 மற்றும் 15 ஆகிய நாட்களில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலமானது நாகராஜா திடலில் ஆரம்பித்து நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளான அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி, வடசேரி மணிமேடை சந்திப்பு, மணியடிச்சான் கோயில், வேப்பமூடு சந்திப்பு அண்ணா பேருந்து நிலையம் வழியாக செல்வதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நேற்று(செப்.,13) அறிவித்துள்ளது.

News September 14, 2024

கோழிவிளை அகதிகள் முகாமில் கலெக்டர் ஆய்வு

image

குமரி மாவட்டம் கோழிவிளையில் இலங்கை வாழ் தமிழர்களின் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மக்களிடம் உள்ள குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

News September 14, 2024

குழித்துறை நகராட்சியில் ஓணம் சிறப்பு நிகழ்ச்சி

image

கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை குமரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் இன்று (செப்.13) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

News September 13, 2024

குமரி MP-க்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து

image

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து பொறுப்பேற்றுக்கொண்டு வாழ்த்துகளை பெற்றார். அவருடன் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!