Kanyakumari

News September 16, 2024

மாத்தூர் தொட்டிப் பாலத்தில் மாணவி தற்கொலை

image

மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு இன்று மாலை பேச்சிப்பாறை அரசு பள்ளி +2 படிக்கும் மாணவி அபிநயா அவளது தோழியுடன் வந்துள்ளார். திடீரென அவர் மாத்தூர் தொட்டிப் பாலத்தில் 70 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்ததில் அடிபட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். தனது தோழி, அபிநயாவை தவிர்த்ததால் மனமுடைந்து தற்கொலை செய்ததாக போலீசார் கூறினர்.

News September 16, 2024

குமரியில் ரூ.50 லட்சம் செலவில் கோசிங் சென்டர் கட்டிடம் திறப்பு

image

நெட்டாங்கோடு ஸ்ரீ ராம் இளைஞர் மன்றம் சுமார் ரூ.50 லட்சம் செலவில் அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது. இதனை எம்.ஆர் காந்தி எம்எல்ஏ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பாஜக துணை தலைவர் குமரி பா.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கட்டிடம் டியூசன் சென்டராக, கோசிங் சென்டராக, செயல்படுத்தபடும் என்று தெரிவிக்கப்பட்டது.

News September 15, 2024

குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் அறிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் இன்று (செப் 15 ) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பக்தர்கள் கோவிலுக்கு வழங்கும் நன்கொடையை தனி நபரிடம் வழங்க வேண்டாம்; கோவில் நிர்வாகத்திடம் நன்கொடைகளை வழங்கி முறையாக ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும்; தனியாரிடம் நன்கொடை வழங்குவதால் முறையாக கோவிலுக்கு அந்த நன்கொடை செல்வதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

News September 15, 2024

அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம்

image

குமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண்கள் கைகாட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்றதை தொடர்ந்து, இளைஞர்கள் சிலர் பின்னால் சென்று, பஸ்சை தடுத்து நிறுத்தி டிரைவரை அறிவுறுத்திய சம்பவம் வலைதளங்களில் பரவியது. இதனைத் தொடர்ந்து டிரைவர் ஸ்டீபன் மற்றும் கண்டக்டர் மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

News September 15, 2024

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை

image

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளான வெள்ளச்சிபாறா, பப்புகாலை, நெட்டா, காளிமலை, குருசுமலை, கணபதிகல், ஒருநூறாம்வயல், மருதம்பாறை, மணலோடை, தச்சமலை, குற்றியார், மங்காமலை உள்ளிட்ட இடங்களில் இன்று (செப் 15) பகல் 2 மணி அளவில் மழை பொழிந்தது. அதே நேரத்தில் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது

News September 15, 2024

விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டோர் எண்ணிக்கை

image

குமரி கடல் நடுவில் அமைந்துள்ள
பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்துக்கு தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த மண்டபத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். ஓணம் பண்டிகை விடுமுறையான இன்று(செப்.15) ஒரே நாளில் 8355 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News September 15, 2024

குமரியில் தூய்மை சேவை விழிப்புணர்வு பிரச்சாரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17ஆம் தேதி முதல் அக்.,2ஆம் தேதி வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற உள்ள நீர், சுகாதாரம், குப்பை அகற்றுதல், நெகிழி மேலாண்மை மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்களின் பங்கேற்புடன் கூடிய “தூய்மையே சேவை எனும் மாபெரும் சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (செப்.15) தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

“நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்” தாரகை அறிக்கை

image

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைத்தது, கீழ்த்தரமான செயல்; பாஜகவின் ஆணவத்தை இதன்மூலம் வெளி உலகத்திற்கு இது காட்டுகிறது; மோடி அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கரையை ஏற்படுத்துவதாக நிர்மலா சீதாராமன் செயல் உள்ளது; இந்திய மக்களிடம் குறிப்பாக தமிழக மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என் தாரகை கத்பட் எம்எல்ஏ அறிக்கை விடுத்துள்ளார்.

News September 15, 2024

இந்திய – இலங்கை இடையே பேச்சுவார்த்தை நடத்துக

image

அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பசலியான் இன்று (செப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக மீனவர்கள் கைது விசைப்படகு பறிமுதல் என இலங்கை தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்தியா இலங்கை மீனவர்கள் இடையே பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கூறியுள்ளார். இது போன்ற பேச்சுவார்த்தை 2010ல் துவங்கியது என்றும் அதில் அவர் கூறியுள்ளார்.

News September 15, 2024

தக்கலை அருகே 1100 மெகா வாட் நீரேற்று மின் திட்டம்

image

தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,100 மெகாவாட் திறனில் தக்கலை அருகே வேளிமலை நீரேற்று மின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அனுமதி பணிகளை மேற்கொள்ள தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது என அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!