Kanyakumari

News September 18, 2024

மின்சார சுடுகாடு அமைக்க தளவாய் சுந்தரம் எதிர்ப்பு

image

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஞாலம் ஊராட்சிக்குட்பட்ட காரியம் கோணம் கிராமத்தில் மின்சார சுடுகாடு அமைக்கும் திட்டத்தை மக்கள் எதிர்ப்பதால் கைவிட வேண்டும். இங்கு அனைத்து சமுதாயத்தில் தனித்தனியாக சுடுகாடு, இடுகாடு வசதி உள்ளது. மேலும் சற்று தொலைவில் உள்ள புளியடி பகுதியில் மின் தகன மேடை உள்ளது. எனவே மக்கள் எதிர்ப்பை மீறி மின்சார சுடுகாடு அமைக்ககூடாது என அவர் கூறியுள்ளார்.

News September 17, 2024

குமரி எல்லையில் நிபா வைரஸ் சோதனை

image

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் உயிரிழந்தாா். அதையடுத்து, தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது. கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழக-கேரள எல்லையோரப் பகுதியான குமரி மாவட்டம் களியக்காவிளையில் நாளை முதல் சுகாதாரத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

News September 17, 2024

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

குருந்தன்கோட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒர்க் ஷாப்பில் பணிபுரிகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்த வேன் ஆனந்த் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News September 17, 2024

குமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

image

மருதங்கோடு ஊராட்சியில் கோணம் (கேந்திரம்) பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகள் திருவுருவ சிலை மற்றும் மண்டபத்தை சேதப்படுத்திய தேசவிரோதிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் கழுவன்திட்டை ஜங்ஷனில் இன்று(செப்.17) மாலை நடைபெற உள்ளது. விளவங்கோடு MLA தாரகை கத்பர்ட் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

News September 17, 2024

நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

image

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று (செப்.17) மாலை 5 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளர்து. இதில் எச்.ராஜாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும், இதில் காங்கிரஸ் கட்சியினர்கலந்து கொள்ள வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 17, 2024

பகவதி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பௌர்ணமி விழா இன்று (செப்.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் அம்மனுக்கு தங்க கிரீடம், தங்க ஆபரணங்கள் மற்றும் வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது. இரவு புஷ்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடைபெறுகிறது.

News September 16, 2024

குதிரை வாகனத்தில் காட்சியளித்த பெருமாள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம்
அருள்மிகு ஸ்ரீஸ்தாணுமாலயன்சுவாமி திருக்கோயில்
ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில்
8 ஆம் நாள் ந்திருவிழாவான இன்று திருவேங்கடம் விண்ணவரம் பெருமாள் சுவாமி குதிரை வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளினார். இதில் ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

News September 16, 2024

12 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்குகள் அனுப்பி வைப்பு

image

குழித்துறை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் கழிவுகள் எந்திரத்தில் அரைக்கப்பட்டு மக்கிய பிறகு குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்காத கழிவு நகராட்சி ஆணையர் ஆணையின் படி, சுகாதார ஆய்வாளர் அறிவுரையின்படி, விற்பனை செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை இன்று செட்டி நாடு சிமெண்ட் ஆலைக்கு 12 MT அனுப்பி வைக்கப்பட்டது.

News September 16, 2024

மகாத்மா காந்தி சிலை உடைப்பு காரணமாக போராட்டம் அறிவிப்பு

image

மருதம் கோடு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் மகாத்மா காந்தியின் சிலையை சமூக விரோதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைத்து சேதப்படுத்தினார். காவல்துறை அதிகாரிகள் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனர் ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத் பட் இன்று அறிவித்துள்ளார்.

News September 16, 2024

அன்பு,ஈகை,சகோதரதத்துவம் – குமரி எம்பி மிலாடி நபி வாழ்த்து

image

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் இன்று(செப்.16) மிலாடி நபி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் நமது இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அன்பு ஈகை சகோதரதத்துவம் ஆகியவற்றை நபிகள் நாயகம் போதித்து மக்களை நல்வழியில் நடத்தினார். அதை பின்பற்றி நாம் வாழ்வதே நாம் செலுத்தும் காணிக்கை. இல்லாதவர்களுக்கு இயன்றவரை நாம் உதவிகள் செய்வோம் என்று அதில் அவர் கூறியுள்ளார்

error: Content is protected !!