Kanyakumari

News September 21, 2024

சிறந்த குறும்படத்திற்கான விருது வழங்கிய குமரி எஸ்பி

image

தமிழக காவல்துறை நடத்திய குறும்பட போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர் இயக்கிய ‘BACARDI’ குறும்படம் முதல் பரிசை தட்டி சென்றது. குறும்படத்திற்கான முதல் பரிசினையும் விருதையும் காசோலையும் கார்த்திக் ராஜாவுக்கு குமரி மாவட்ட கண்காணிப்பாளர் தசுந்தரவதனம் இந்து கல்லூரியில் வைத்து வழங்கி கௌரவித்தார்.

News September 20, 2024

குறும்பட போட்டியில் பரிசு வழங்கிய எஸ்பி

image

குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் பெண்களுக்கான இணைய வெளி பாதுகாப்பு என்ற தலைப்பில் குறும்பட போட்டி கடந்த மாத நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு எஸ்பி சுந்தரவதனம் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழை இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 20, 2024

குமரி அருகே போராட்டம் அறிவிப்பு

image

குமரி, மணவாளகுறிசியில் ‘இந்திய அரிய மணல் ஆலை’ மத்திய அரசின் கீழ் செயல்படுகிறது. இந்த ஆலை மூலம் கடலோரப் பகுதிகளில் கனிம வளத்திற்காக மணல் எடுக்க அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் வர உள்ளதாகவும் கூறப்டுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூத்துறையில் வரும் 22ஆம் தேதி காலை 8:30 மணிக்கு இது சம்பந்தமாக அறவழி போராட்டம் நடத்தவிருப்பதாக அப்பகுதி மீனவ மக்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

News September 20, 2024

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியர் அழகுமீனா ஆலோசனை மேற்கொண்டார். குமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சிறுக முறை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

News September 20, 2024

23,500 லிட்டர் பால் தினசரி விற்பனை – ஆட்சியர்

image

குமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் பிரதம பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடமிருந்து 38 ஆயிரம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது. தேவைக்கேற்ப பால் கொள்முதல் செய்து 23,500 லிட்டர் பால் வரை தினசரி விற்பனை செய்யப்படுகிறது. தினசரி ரூ.1.4 லட்சம் மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனையாகிறது என மாவட்ட ஆட்சியர் நேற்று (செப்.19) தெரிவித்தார்.

News September 20, 2024

குமரி மாவட்ட வன அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

image

குமரி மாவட்ட வனத்துறையில் தற்காலிக பணிக்கு பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை வரும் 23ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று(செப்.,20) தெரிவித்துள்ளார். முற்றிலும் தற்காலிகமான வேலை வாய்ப்பு இது என்றும், பணிக்காலம் 12 மாதங்கள் என்றும், பணிக்காலத்தில் மாதம் ரூ.20 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

குமரியில் சத்துணவால் 67398 மாணவர்கள் பயன்

image

தமிழ்நாட்டில் 1982ஆம் ஆண்டு பள்ளிகளில் சத்துணவு திட்டம் துவங்கப்பட்டது. சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவர்களுக்கு செவ்வாய் 20 கிராம் கொண்டைக் கடலை, வெள்ளிக்கிழமை 20 கிராம் உருளைக்கிழங்கு கூடுதலாக வழங்கப்படுகிறது. 5 நாட்கள் வேக வைத்த முட்டை வமுங்கப்படுகிறது. 2023-24 கல்வி ஆண்டில் குமரி மாவட்டத்தில் 664 பள்ளிகளில் 67 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 20, 2024

குமரியில் போன் செய்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் எஸ்கேப்

image

அழகன்பாறை அருள்ராஜ் மகள் அருள் ஜாஸ்மின்(24) மருத்துவமனையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், ஆஸ்பத்திரியில் விடுமுறை சொல்கிறேன் என கூறிவிட்டு ஸ்கூட்டரில் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் தந்தையை தொடர்புகொண்டு தன்னை தேடவேண்டாம், ஸ்கூட்டர் லெஷ்மிபுரத்தில் உள்ளது என கூறி மாயமாகி உள்ளார். குளச்சல் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News September 20, 2024

ஸ்காலர்ஷிப் பெயரில் மோசடி காவல்துறை எச்சரிக்கை

image

குமரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் உங்கள் மகன், மகள் பெயரைச் சொல்லி ஸ்காலர்ஷிப் வந்துள்ளது என்று கூறி செயலிகள் மூலம் மோசடி செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகின்ற அக்டோபர் 3 அன்று தொடங்குகிறது. இந்ததிருவிழா 12 ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வாகன பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.10 ஆம் திருவிழாவான அக்.12 பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் கடலில் அம்மனுக்கு ஆளட்டும் கிழக்கு வாசல் திறப்பும நடக்கிறது.

error: Content is protected !!