India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பார்சல் பிரிவுக்கு வந்த 4 பார்சல்கள் யாரும் எடுக்க வராத நிலையில்அது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே போலீசார் அவை போதைப்பொருள் என்பதை கண்டறிந்து கைப்பற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த போதைப் பொருள்யாருக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போதை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் ரயில்வே போலீசார் நாளை ஒப்படைக்க உள்ளனர்.
குமரி காப்பிக்காடு பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ்-வசந்தி ஆகியோர், தங்களது கன் சுமித்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொச்சி விமான நிலையத்துக்கு நேற்று(செப்.,21) சென்றுள்ளனர். சுமித்தை விமானத்தில் அனுப்பிவிட்டு காரில் சுரேஷ், வசந்தி, உறவினர் பிபின் ஆகியோர் குமரி திரும்பினர். கூடல் இஞ்சிப்பாறை அருகே வந்தபோது நேர்ந்த விபத்தில் வசந்தி, பிபின் உயிரிழந்தனர். சுரேஷ் & காரை ஓட்டி வந்த சிபின் சிகிச்சையில் உள்ளனர்.
குமரி ஐகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா. நேற்று(செப்.20) இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தின் கிள்ளியூர் பகுதியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், 1144 ஹெக்டேர் பரப்பில் மோனோசைட், சிர்கான், இல்மனைட் ரூட்டைல், செலிமினேட், கார்னெட் ஆகிய தாது மணல்களை அகழ்வு செய்ய இருப்பதாக இந்திய மணல் ஆலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
குடியிருப்பு பகுதி, பொதுபயன்பாட்டில் உள்ள பகுதி & தனிநபர் வசிக்கும் பகுதிகளில் கனிமங்கள் நிறைந்த மண் எடுக்கப்பட மாட்டாது. மாறாக, காலி நிலப்பரப்பில் அந்தந்த இடத்தின் உரிமையாளர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே கனிமங்கள் எடுக்கப்படும். யாரும், எந்த இடத்தில் இருந்தும் மாற்றப்பட மாட்டார்கள் என IREL விளக்கம் தந்துள்ளது. அணுக்கனிம சுரங்கம் தொடர்பாக பிரச்னை எழுந்த நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தற்போது ஒருவித வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதுடன் மருத்துவர்களை அணுகி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் காய்ச்சலால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், முகக்கவசம் அணிந்து கொள்வதுடன் கைகளை கழுவி சுத்தமாக இருக்கவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏவிஎம் கால் வாயை தூர்வாரி குப்பைகளை அகற்ற ரூ.38 லட்சம் செலவில் குளச்சல் நகராட்சியால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் நீரோடி முதல் இறையும் மன்துறை வரை ஏவி.எம் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மூலம் கொல்லங்கோடு நகராட்சிக்கு தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது என நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெருவுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின். எம்.எஸ்.சி பட்டதாரியான இவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடற்படையில் பணிபுரியும் ரவி, இம்மானுவேல் ராஜ்குமார் மற்றும் ஹரிகரமோர் ஆகியோர் ரூ.17 லட்சம் வாங்கிக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மெர்லின்கருங்கல் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் 1144 ஹெக்டேர் நிலப்பரப்பில் அணுகனிம சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையான 48 கடலோர கிராம பெண் பிரதிநிதிகள் அணுகனிம சுரங்க திட்டத்திற்கு அனுமதி வழங்கிய மத்திய, மாநில அரசுகள் அனுமதியை ரத்து செய்யவும், இந்தியஅரிய மணல் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு 1000 மனுக்களை வழங்கினர்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி நாளை கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நாகர்கோவில் வரும் அவர் நாகர்கோவில் பயணிகள் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் திருவட்டாறில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார். அதன் பின் நெட்டா அருகில் உள்ள ரிசார்டில் தங்குகிறார். கவர்னர் வருகையை ஒட்டி மாவட்டத்தில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.