Kanyakumari

News September 23, 2024

குமரி வரும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர்

image

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து குமாரகோவில் முருகன், தேவாரக்கெட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் அக்.,1ஆம் தேதி ஊர்வலமாக புறப்பட்டு 3ஆம் நாள் திருவனந்தபுரம் அடையும். இந்நிலையில், பத்மநாபபுரம் அரண்மனையில் நடக்கும் உடைவாள் மாற்றுதல், விக்ரக புறப்பாடு நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், 2 மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

News September 23, 2024

அணு கனிம சுரங்கம்: விஜய் வசந்த் MP வலியுறுத்தல்

image

விஜய் வசந்த் MP நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் மக்களின் சந்தேகங்களுக்கு அரசு உரிய பதிலளிக்க வேண்டும். அச்சத்தை போக்குவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும். கடல் மணலில் இருந்து கனிமங்களை பிரித்தெடுக்கும்போது ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவா என்பதை குறித்து ஆராயவேண்டும் என கூறியுள்ளார்.

News September 23, 2024

முதல்வர் வெளிநாடு பயணம் குறித்து அதிமுக நிர்வாகி தாக்கு!

image

அதிமுக மீனவர் அணி இணைச் செயலாளர் பசலியான் நசரேத் நேற்று(செப்.,22) அறிக்கை வெளியிட்டார். அதில், தெலங்கானா முதல்வர், கர்நாடக தொழில்துறை அமைச்சர் ஆகியோர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு ஈர்த்த நிலையில் தமிழக முதல்வர் 17 நாள் சுற்றுப்பயணம் செய்து ரூ.7,616 மட்டுமே முதலீடு ஈர்த்துள்ளது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

News September 23, 2024

குமரி வருகை தரும் மத்திய அமைச்சர் எல்.முருகன்

image

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று(செப்.,23) குமரி வருகை தர உள்ளார். அவர் கலந்து கொள்ளவிருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் குமரி மாவட்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் அணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 23, 2024

மாநில போட்டிக்கு தகுதிபெற்றோர் மேயரை சந்தித்து வாழ்த்து

image

முதலமைச்சர் கோப்பை குமரி மாவட்டத்திற்கான விளையாட்டு போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதன் சிலம்ப போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி சுதி, மாணவர் பிரவின், ஓட்டபந்தயத்தில் முதல் பரிசு பெற்ற ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து நாகர்கோவில் மேயர் மகேஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News September 22, 2024

கனிம வளம் ஏற்றி சென்ற 24 வாகனங்கள் பறிமுதல்

image

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனங்களில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 24 வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவைகளை பறிமுதல் செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 22, 2024

தாது மணல் எடுக்கும் திட்டம்: நாகர்கோவில் விசிக அறிவிப்பு

image

நாகர்கோவில் மாநகர மாவட்ட விசிக செயலாளர் அல் காலித் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு 1144 ஹெக்டேர் பரப்பில் தாது மணல் எடுக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். எனவே இந்த திட்டத்தை எதிர்க்கும் வகையில் கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

News September 22, 2024

கோதை ஆறு மலையோரப் பகுதிகளில் நில அதிர்வு

image

குமரி மாவட்டம் கோதையாறு பகுதி மலையோர கிராமமாகும். இங்கு 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இன்று காலை 11:30 மணியளவில் அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நில அதிர்வு சில வினாடிகள் மட்டுமே இருந்துள்ளது .இதே போல் கோதையாறை ஒட்டியுள்ள கொடுத்தரைமலை பகுதியில் காணியிட மக்கள் வசித்து வரும் பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

News September 22, 2024

முறைகேடுகளை கண்காணிக்க அதிகாரி நியமனம்

image

அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் பயிலும்  மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக பயன்படுத்தி, அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இதை தடுக்க மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களை கண்காணிக்கவும், செயல்பாடுகளை ஆய்வு செய்யவும் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

News September 22, 2024

குமரியில் கடல் ஆம்புலன்ஸ் அமைக்க அரசுக்கு பரிந்துரை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சில நேரங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். அவ்வாறு காணாமல் போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிப்பதற்கு வசதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்ப மீன்வளத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

error: Content is protected !!