Kanyakumari

News March 25, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 25) 28.48 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.80 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 61 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News March 25, 2025

நாகர்கோவில்-கச்சிகுடா சிறப்பு ரயில் நீட்டிப்பு 

image

நாகர்கோவிலில் இருந்து கட்சிகுடா வரை செல்லும் ரயில் வாராந்திர சிறப்பு ரயிலாக  இயக்கப்பட்டு வரும் நிலையில்,இந்த ரயில் வருகிற மே மாதம் நான்காம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே நிருவாகம் தெரிவித்துள்ளது. 

News March 25, 2025

குமரியில் ரவுடிகளின்  தீவிர கண்காணிப்பு

image

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கையாக ரவுடிகளை கண்காணித்து கைது செய்ய டிஜிபி உத்தரவு விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கண்காணிக்கும் பணியை காவல்துறையினர் மேற்கொண்டு உள்ளனர் இதில்தொடர்ந்து தவறு செய்து வருபவர்களை போலீசார் கைது செய்ய தொடங்கியுள்ளனர்.

News March 25, 2025

மின்சாரம் தாக்கி நடுக்கடலில் குமரி மீனவர் பலி

image

குளச்சலை சேர்ந்தவர் மீனவர் லிபின்ஸ்டன் மார்ச் 20ம் தேதி மீனவர்களோடு மீன்பிடிக்க சென்றார்.நேற்று பாம்பன் தூத்துக்குடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது,படகில் உள்ள ஸ்விட்ச்சை ஆன் செய்த லிபின்ஸ்டன் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.அவரை மீட்டு ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததனர்.இது குறித்து மண்டபம் போலீசார் விசாரணை.

News March 24, 2025

நாகர்கோவில் பிரபல தனியார் ஹோட்டலுக்கு அதிரடி சீல்

image

நாகர்கோவிலில் உள்ள லியாகத் என்னும் ஹோட்டலில் நேற்று மந்தி பிரியாணி சாப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்த ஓட்டலில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உணவின் தரம் குறைவாக இருந்ததால் ரூ.10000 அபராதம் விதித்து கடைக்கு சீல் வைத்தனர். *நண்பர்களுக்கு பகிரவும்*

News March 24, 2025

குமரியில் வெளியான காசநோய் ரிப்போர்ட்

image

குமரி மாவட்டத்தில் 2023ல் 1356 பேருக்கும், 2024 ல் 1282 பேருக்கும் காசநோய் கண்டறியப்பட்டுள்ளது. அதில் குமரி அரசு மருத்துவ கல்லூரியில் 2023-ல் கண்டுபிடிக்கபட்ட 415 பேரில் 274 பேருக்கு நுரையீரல் காசநோயும், 130 பேருக்கு நுரையீரல் அல்லாத உறுப்புகளில் காசநோயும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 11 குழந்தைகளும், 11 HIV நோயாளிகளும், 110 சர்க்கரை நோயாளிகளும் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது. 

News March 24, 2025

கோடை விடுமுறை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

தமிழகத்தில் கோடை விடுமுறையில் ரயில்களில் தேவைக்கு ஏற்ப மூன்று பெட்டிகள் வரை கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் குமரி, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் காத்திருப்பு எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 24, 2025

உலக காசநோய் தினம் விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

image

உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி வருடம்தோறும் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காசநோய் ஒழிப்பு தீபம் ஏந்தி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நாகர்கோவிலில் கோணம் அரசு கல்லூரியிலிருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகத்தில் முடிந்தது. முடிவில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா காசநோய் விழிப்புணர்வு தீபத்தினை ஏற்றி தொடர் ஓட்டத்தினை முடித்து வைத்தார்.

News March 24, 2025

குமரியில் ஆவின் பால் கொள்முதல் 6000 லிட்டராக சரிவு!

image

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதில்லை. இதன் காரணமாக மாடுகளுக்கு பால் சுரக்கும் தன்மை குறைந்து, 9000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அது 6000 லிட்டராக குறைந்துள்ளது. மீதமுள்ள பாலை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

News March 24, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 24) 28.80 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.90அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 30 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 32 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

error: Content is protected !!