Kanyakumari

News April 6, 2025

குமரியில் 120 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் – ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும்11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்காக இம்மாதம் 22 ஆம் தேதி வரை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

News April 6, 2025

மின நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் 230 மனுக்கள் 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நாகர்கோவில், தக்கலை மற்றும் குழித்துறை ஆகிய 3 இடங்களில் நேற்று (ஏப் 5) நடைபெற்றது. இந்த முகாமில் நாகர்கோவிலில் 114 மனுக்களும், குழித்துறையில் 44 மனுக்களும், தக்கலையில் 72 மனுக்களும் என மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 6, 2025

குமரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டெலிகாலர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 – 59 வயதிற்குட்பட்டவர்கள் மே.31 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 6, 2025

குமரியில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2025 அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் 10 தேர்ச்சி ரூ.300, +2 தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். SHARE IT

News April 6, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.6 ) 30.18 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.05 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.72 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.82 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 233 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 72 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

News April 6, 2025

முன்னாள் ராணுவ வீரர் போக்சோவில் கைது

image

நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கம்(59). முன்னாள் ராணுவ வீரரான இவர் 7 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆபாச செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தங்கத்தை கைது செய்தனர்.

News April 5, 2025

எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்சின் பெருமைகள்

image

எங்கள் லேடி ஆஃப் ரான்சம் சர்ச், கிறிஸ்தவர்களின் புனித தளங்களில் ஒன்று ஆகும். இங்கு ஏழு புனித பழங்களைக் குறிக்கும் வகையில், தேவாலயம் ஏழு கதவுகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. வருடம் தோறும் இங்கு வரும் பக்தர்கள் மெழுகு ஏத்தி வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இயேசு பிறந்த டிசம்பர் மாதம் இங்கு மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. ஷேர் பண்ணுங்கள்

News April 5, 2025

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் பலி 

image

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் அம்முகுட்டி, இவர் இன்று காலை வீட்டுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது மின் கம்பி அறுந்து தொங்கியபடி கிடந்ததை கவனிக்காத அம்முக்குட்டி கம்பியில் மேல் மிதித்துள்ளார். அப்போது தூக்கி வீசப்பட்ட அம்முகுட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

News April 5, 2025

குமரி: பெண்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட தானியங்கி நிபுணர் (Automation Specialist) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு <<>>கிளிக் செய்து 04-06-2025க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 5, 2025

குமரி: போலீஸ் வீட்டில் திருட்டு

image

வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி. இவர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி பிந்துஜா கணவரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

error: Content is protected !!