India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய 3 நாட்கள் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் மதுக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக இருந்தது.18-ந் தேதி ரூ.4 கோடியே 21 லட்சத்து 92 ஆயிரத்து 910-க்கும், 19-ந் தேதி ரூ.5 கோடியே 50 லட்சத்து 59 ஆயிரத்து 90-க்கும் விற்பனை ஆனது. தீபாவளி அன்று ரூ.4 கோடியே 44 லட்சத்து 24 ஆயிரத்து 760-க்கு மதுபானங்கள் விற்பனையானது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்”: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் நீர் நிலைப்பகுதிகளான வாய்க்கால்கள், ஓடைகள், குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் பாயும் வெள்ளத்தினை வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்கவோ,கால்களை நனைக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி குமரி மாவட்டத்துக்கு இன்று (அக்.21) மிக கனமழை பெய்யக்கூடும் என ALERT எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரி மக்களே வெளியே போகும் போது குடை எடுத்துட்டு போங்க…ஷேர்!

தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதை கண்காணிக்க மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. குமரியில் நேர விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர்.

குமரி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <

கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த JCP டிரைவர் சதீஷ்குமார் என்பவரை வாய் தகராறில் சாம்சன், சுனில், சோபகுமார், பிஜூ, அனில்குமார் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் காயமடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அவ்வப்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் மின் சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் எனவும் மழைக்காலங்களில் நீர் நிலைகள், மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். மேலும் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 குறை தீர்க்கும் முகாம் அக்.27 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் தொழிலாளர்கள் குறைகளை நேரடியாக முன்வைத்து தீர்வு பெறலாம் என நாகர்கோவில் மண்டல ஆணையர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று (அக் 21) செய்தியாளர்களிடம் பேசும் போது: தீபாவளி பண்டிகையை யொட்டி நேற்று மாவட்டத்தில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்களும் காவல்துறை எச்சரிக்கை காரணமாக ரீல்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாவட்டத்தில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகை நடைபெற்றுள்ளது என்றார்.

தீபாவளி பண்டிகை நேற்றுக் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி பட்டாசு விடுக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 7 பேர் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.