India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று கருங்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, குமரி கடற்கரை கிராமங்களில் மணல் அல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாநில அரசுக்கு இப்போதுதான் கருத்து கேட்க அனுப்பியுள்ளனர். இதில் மக்கள் என்ன நிலைபாடு எடுக்கிறார்களோ அதுதான் குமரி மாவட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியான காங்., கட்சியின் நிலைப்பாடு என்றார்.
கிள்ளியூர் வட்டாரதோட்டக் கலை உதவி இயக்குநர் நவ நீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிள்ளியூர் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வாழைக்கன்றுகள் (நேந்திரன் ரகம்) வழங்கப்பட்டு வருகிறது. புகைப்படம், ஆதார் நகல், உட்பட ஆவணங்களுடன் கருங்கலில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி வாழைக்கன்று பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு எண்: 9600 824171, 96987 04014, 80156 86758.
நாகர்கோவில் ரயில் நிலைய பார்சல் பிரிவிற்கு வந்த 4 பார்சலை யாரும் எடுத்துச் செல்ல வரவில்லை. இதைத் தொடர்ந்து சோதனை செய்த ரயில்வே அதிகாரிகள் அதில் புகையிலைப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 100 கிலோ புகையிலை பொருட்கள் அந்த பார்சலில் இருந்ததை தொடர்ந்து அவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் நேற்று(செப்.,24) ரயில்வேபோலீசார் ஒப்படைத்தனர்.
குழித்துறை நகராட்சியில் நடைபெற்று வரும் “துய்மையே சேவை” நிகழ்வில் ஒரு பகுதியாக 10 ஆவது வார்டுக்குட்பட்ட குழித்துறை தேவிகுமாரி கலை கல்லூரியில் வைத்து இன்று (செப்-23) மாணவிகளுக்கு தூய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் தூய்மையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் துய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குளித்துறை நகராட்சி பகுதிகளில் 2009 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய 31.12.2024 ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் குழித்துறை நகராட்சி பிறப்பு, இறப்பு அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு குழித்துறை நகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் தாது மணல் பிரித்தெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது. இதனால் புற்றுநோய், தோல்நோய் அதிகமாக பரவும் என்று தெரிந்தும், அணு கனிம சுரங்கம் அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும் என நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக இன்று (செப்-23) மனு கொடுக்கப்பட்டது.
நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்., தலைவர் நவீன் மற்றும் காங்கிரசார் எஸ்.பி.யிடம் இன்று மனு கொடுத்தனர். அதில் எச்.ராஜா, ராகுல் காந்தி குறித்து பேசுவது அதிர்ச்சியை தருகிறது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் எச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
குறும்பனையைச் சேர்ந்த மீனவர்கள்நேற்று மாலை தேங்காய்பட்டினம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இணையம் புத்தம் துறையைச் சேர்ந்த மீனவர்கள் 6 படகுகளில் வந்து சாஜூக்கு சொந்தமான படகை சூழ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மீனவர்களின் செல்போன், ஜி.பி.எஸ் ஒயர்லெஸ் மற்றும் கருவிகள் கடலில் வீசப்பட்டன. இதில் குறும்பனையைச் சேர்ந்த 8 மீனவர்கள் காயமடைந்தனர்.
திருவனந்தபுரம் -மங்களுர் மற்றும் நாகர்கோவில் – கொச்சுவேலி பயணிகள் ரயிலை இணைத்து ஒரே ரயிலாக கன்னியாகுமரி –மங்களுர் என்று இயக்க வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ரயில் இயக்கப்பட்டால் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொது துறைகளை தனியாருக்கு விற்கக்கூடாது. சம வேலைக்கு சம ஊதிய சட்டம் அமல்படுத்த வேண்டும். போராட்ட உரிமையை அமல்படுத்த வேண்டும். நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட தொழிற்சங்கங்கள்(சி.ஐ.டி.யு., எம்.எல்.எப்., & எல்.பி.எப்.) சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.