Kanyakumari

News September 25, 2024

குமரி அருகே காதலை கைவிட்டதால் குத்து!

image

குமரி பைங்குளத்தை சேர்ந்த இளம்பெண் கொல்லங்கோடு பகுதி அரசுப் பள்ளியில் பயிற்சி ஆசிரியையாக சென்று வந்தார். அதே பகுதியை சேர்ந்த அருண் என்பவரும் அப்பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அருணுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் காதலிப்பதை ஆசிரியை நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த அருண் நேற்று அப்பெண் பைக்கில் சென்றபோது கூர்மையான ஆயுதத்தால் குத்தி உள்ளார். புகாரின்பேரில் அருணை போலீசார் கைது செய்தனர்.

News September 25, 2024

குமரியில் வடகிழக்கு பருவமழை

image

குமரி மாவட்டத்தில் வட கிழக்குப் பருவமழை அடுத்த வாரத்தில் தொடங்க இருக்கிறது. வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காற்று திசைமாற்றம் ஏற்பட்டு சனிக்கிழமை முதல் வெப்பச்சலன இடி மழை தொடங்க வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மேகங்கள் பிற்பகலுக்குப் பிறகு மாலை நேரத்தில் உருவாக துவங்கும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 25, 2024

மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஜெயந்தி விழா

image

பேச்சிப்பாறை அணைக்கான கட்டுமான பணிகள் 1895 ஆம் ஆண்டு தொடங்கி 1906 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 100 ஆண்டுகள் கடந்தும் குமரி மக்களின் ஜீவாதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணையைக் கட்டிய மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ராமவர்மா ஜெயந்தி விழா பேச்சிப்பாறையில் இன்று(செப்.,25) நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மன்னார் திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலியும், தொடர்ந்து நீர் தேக்கத்தில் ஆரத்தியும் நடக்கிறது.

News September 25, 2024

சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.ஆட்சியர் அறிவிப்பு.

image

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.09.2024 அன்று மதியம் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கம் நாகர்கோவிலில் வைத்து நடைபெற உள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகள் தங்களின் கோரிக்கைகளுடன் அன்றைய தினம் கலந்து கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 25, 2024

நாகர்கோவிலில் உண்ணாவிரதப் போராட்டம்; உதயகுமார் அறிவிப்பு

image

குமரி மாவட்டம் மருதங்கோடு அருகே காதி போர்டுக்கு சொந்தமான இடத்தில் இருந்த காந்தி சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை இதுவரையிலும் யாரையும் கைது செய்யவில்லை. அக்டோபர் 2ம் தேதிக்குள் காவல்துறை யாரையும் கைது செய்யவில்லை என்றால் 2ம் தேதி நாகர்கோவிலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப உதயகுமார் அறிவித்துள்ளார்.

News September 24, 2024

காக்கும் கரங்கள் திட்டத்தில் கடன் உதவி ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் வாயிலாக கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் இந்தத் திட்டம் வாயிலாக தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும் 3% வட்டி மானியமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

News September 24, 2024

குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி நியமனம்

image

குமரி மாவட்டத்தில் சிறப்பு திட்டங்களை கண்காணிக்க புதிய திருப்பூர் ஏரியா மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் ஹனிஸ் சப்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்று வரும் சிறப்புத் திட்டங்களில் அமுலாக்கம் தொடர்பாக ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 24, 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக 17 லட்சம் மோசடி

image

குமரி தெருவுக்கரையை சேர்ந்தவர் மெர்லின். பட்டதாரியான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரவி என்பவரது முயற்சியில் இம்மானுவேல் மற்றும் ஹரிகுமார் ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.17 லட்சம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கி கொடுக்காமல் பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இது குறித்து மெர்லின் கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News September 24, 2024

குமரியில் உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டம்

image

குமரியில் சுற்றுலாத்துறை சார்பில் வருகிற 27ஆம் தேதி உலக சுற்றுலா தின விழாகொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் குமரி வரும் வெளி நாட்டுசுற்றுலா பயணிகளுக்கு நினைவுபரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. கருத்தரங்கம் நடக்கிறது. மாலையில் சன்செட் பாயிண்ட் கடற்கரையில் தென்னக கலை பண்பாட்டு துறை சார்பில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. மாணவ மாணவிகளுக்கான பேச்சுகட்டுரை போட்டிகளும் நடக்கிறது.

News September 24, 2024

குமரியை கலக்கிய பிரபல ரவுடி கைது

image

குமரி அருகே சின்னமுட்டத்தை சேர்ந்தவர் லக்ஸ்(25). பிரபல ரவுடியான இவர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி பயங்கர ஆயுதங்கள் பயன்படுத்துதல் உள்பட 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஒரு வருடமாக டிமிக்கி கொடுத்து வந்த இவரை குமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சுற்றி வளைத்து நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!