India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட சிங்கன்காவு பகுதியில் குடியிருப்பு பகுதியில் விதிமுறைகளை பின்பற்றாமல், பேக்கரி பண்டங்கள் உற்பத்தி செய்யும் நோக்கில் பேக்கரி துவங்குவதற்கான பணிகள் நடைபெறுகிறது. அரசு அனுமதி பெறாமல் நடைபெறும் இந்த பேக்கரியால் சுகாதார கேடு ஏற்பட வாய்புள்ளது. எனவே இந்த பேக்கரிக்கு தடை விதிக்க கோரி சி பி ஐ எம் எல் அகில இந்திய முற்போக்கு பெண்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையோரப் பகுதிகளில் விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மலையை ஒட்டிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இந்த நிலையில் காளிகேசம் ஆற்றில்தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காளிகேசம் மற்றும் கீரிப்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. நிலைமை சீரான பின்னர் அங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
இரணியல் ரயில் நிலையம் அருகாமையில் ஜல்லி யார்டு அமைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சித்து வந்நது. அது மக்களுக்கு மிகவும் பாதிப்பாக இருப்பதை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த ஜல்லி யார்டை மாற்றாவிட்டால் குமரி மாவட்ட அளவில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் சால்வேஷன் ஆர்மி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நாளை(அக்.,11) நடைபெற உள்ளது. நடைபெற உள்ள நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். குமரிக்கு வருகை தரும் திருமாவளவனுக்கு கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் அல் காலித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், போதைப் பொருள் தடுப்புக் குழுக்கள் கல்லூரி அளவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த குழுக்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Willow Warbler(Phylloscopus trochilus) எனப்படும் கதிர்க்குருவி வகையை சேர்ந்த ஐரோப்பா மற்றும் Palearctic சுற்றுச்சூழல் மண்டலங்களில் வாழும் இப்பறவை, தமிழ்நாட்டில் முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரியக்குளம் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறவை ஆர்வலரான ஆனந்த் சிபு, குமரி பகுதியில் இப்பறவை இருப்பதாக பதிவு செய்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இயங்கி வரும் ரேசன் கடைகளில், விற்பனையாளர் & கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், குமரி மாவட்டத்தில் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
கோட்டார், தக்கலை, குழித்துறை மறைமாவட்டம், தென்னிந்திய திருச்சபை, பெந்தேகோஸ்தே கூட்டமைப்பு, இரட்சணிய சேனை, IELC, மெசியா மிஷன், LMS சார்பாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்,
சமூகத்திற்கும் அரசுக்கும் பாலமாக அமைச்சர் மனோதங்கராஜ் இருந்தார்; அவர், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி; மீண்டும் அவரை அமைச்சராக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜாக்சனை 9 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தது. இதில், 8 பேர் கைதாகினர். முக்கிய குற்றவாளி ராஜகுமார் கைதாகவில்லை. இந்நிலையில் ஜாக்சன மனைவியும் திருவட்டார் கவுன்சிலருமான உஷா குமாரிக்கு, சந்தையடி கிருஷ்ணகுமார், “நீயும் வேண்டும் உனது பணமும் வேண்டும்” என ஆபாச வார்த்தைகளுடன் கடிதம் எழுதி உள்ளார். இது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
விஜய் வசந்த் எம்.பி. இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது; இயக்குனர் மணிரத்தினம், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்; திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகை விருது பெற்றுள்ளார்; அவருக்கும் வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.