India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதியோர் தடகளப் போட்டி வருகிற அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், “கலந்துகொள்ள அனுமதி இலவசம்; பங்கு பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்; 30 வயது முதல் 100 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்” என மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக தடுக்க காவல்துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் புகையிலை விற்பனை செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில், 47 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மணவாளாக்குறிச்சியில் உள்ள மத்திய அரசின் IREக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருளுக்காக இனயம், ஏழுதேசம் உட்பட்ட பகுதியில் 1144 ஏக்கர் பரப்பில் சுரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழக மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்
நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் பொன். மாதவன் உட்பட 4 வழக்கறிஞர்களை உறுதிமொழி ஆணையராக மதுரை ஐகோர்ட் பதிவாளர் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதில் வழக்கறிஞர் பொன்.மாதவன் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நோட்டரி பப்ளிக்காகவும், பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கான சான்றிதழை கன்னியாகுமரி மாவட்ட நீதிபதி பொன். மாதவனிடம் வழங்கினார்.
“நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை இல்லை” என்ற வாசகம் அடங்கிய துண்டு பிரசுரத்தை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்டார்“ ஒவ்வொரு கடைகளுக்கும் அவர் நேரடியாகச் சென்று அந்த துண்டு பிரசுரத்தை கொடுத்து, கடைகளில் முன்பு அதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கும் படி அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நித்திரவிளை அடைக்காகுழியைச் சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின்(42). களியக்காவிளை அருகே கேரள மாநிலம் பாறசாலையில் ஊட்டச்சத்து நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இவரது நிறுவன பெண் ஊழியரை பூவார் பகுதியில் பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும் என காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயல, அந்த பெண் தப்பி ஓடினார். இதுகுறித்த புகாரில் பாறசாலை போலீசார் அபிலாஷ் பெர்லினை கைது செய்தனர்.
திமுக பவள விழாவை நிறைவுற்றதையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா இன்று (செப்-28) நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குமரி காந்தி மண்டபத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு காந்தியின் நினைவிடம் உள்ளது. அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி இதன் மீது விழும். இந்த அபூர்வ ஒளியை காண ஏராளமான சுற்றுலா பணிகள் வருகை தருவர். இந்த ஆண்டு வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 12 மணிக்கு காந்தி நினைவு மண்டபத்தில் அவரது அஸ்தியில் அபூர்வ ஒளி விழுவதை பார்க்கலாம்.
குளச்சல் அருகே நேற்று இரவு போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது, தனியாருக்கு சொந்தமான ATM-லிருந்து ஒருவர் தப்பி ஓடினார். CCTV காட்சிகளை வைத்து அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுல் அலி என்பவரை இன்று(செப்.,28) கைது செய்தனர். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சின்ன & துறைமுகத்தில் முட்டம் துறைமுகத்தில் வேலைக்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.