India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தில் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 40 கிலோ மீட்டர் தூரத்திற்குள் 2 டோல்கேட் உள்ளதால் இதனை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்., தலைவர் நவீன்குமார் நேற்று(செப்.,29) அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கன்னியாகுமரி பகுதியில் 18 வயது குறைவான சிறுவர்கள் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காகவும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஒட்டி வந்ததாகவும் 15 இருசக்கர வாகனங்களை இன்று (செப்.29) பறிமுதல் செய்து அபராதம் விதித்தனார். அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை போலீசார் வாகனத்தில் இருந்து அகற்றினர்.
மயிலாடியைச் சேர்ந்தவர் நாராயண செல்வம். இவர் ட்ரெய்லர் லாரியில் சிற்பக்கல் ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து மயிலாடிக்கு சென்று கொண்டிருந்தார். குமாரபுரம் அருகே சென்று கொண்டிருக்கும்போது பின்னால் சிபின்தாஸ் என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி திரும்பும்போது ட்ரெய்லர் லாரி மீது மோதியது.இதில் ட்ரெய்லர் லாரி கவிழ்ந்து நாராயணசெல்வத்திற்கு காயம் ஏற்பட்டது. ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்திய ஓமன் கடல் எல்லையில் தத்தளித்த 12 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையின் உதவியுடன் Kyla Fortune என்கிற சாக்கு கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 12 மீனவர்களும் அக்.1ஆம் தேதி கொச்சின் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்தடைவதற்கான ஏற்பாடுகளை இந்திய கடலோர காவற்படை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் இன்று (செப்.29) தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 6 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால் ஊராட்சிகளின் எண்ணிக்கை 89ஆக குறைகிறது. மேலும் சில ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல நகராட்சிகளுடன் 6 பேரூராட்சிகளை இணைப்பதால் பேரூராட்சிகளின் எண்ணிக்கை 55ல் இருந்து 49ஆக குறைகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னிதித்த நங்கை அம்மன் விக்ரகம் நாளை காவல்துறை அணிவகுப்பு மரியாதை உடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இன்று (செப்.29) இரவு கன்னியாகுமரி வருகை தர இருக்கிறார். பின்னர் நாளை சுசீந்திரத்தில் நடைபெறும் விக்கிரக புறப்பாடு ஊர்வலத்தில் சுரேஷ் கோபி கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளில் போலீசாரும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மாவட்டத்தில் 304 கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு அந்தக் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (செப்.28) தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “குமரியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற் கூடங்கள் அமைக்கப்பட இருக்கிறது” என கூறியுள்ளார். இது தொடர்பாக வருகிற 15-ம் தேதி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் தானம் செய்வதற்கு இந்த ஆண்டு மட்டும் 50 பேர் பதிவு செய்துள்ளனர். இறந்தவர்கள் கண் தானம் செய்வது தொடர்பாக பதிவு செய்திருந்தாலும் கூட, சில சமயங்களில் அவர்களின் உறவினர்கள் எதற்கு ஒத்துழைப்பதில்லை. மேலும் இறப்பு குறித்து நீண்ட நேரத்துக்கு பிறகு தகவல் தெரிவிப்பது போன்ற காரணங்களினால், கண் தானம் பெற முடியாத நிலை ஏற்படுகிறது என டாக்டர் பீனா நேற்று கூறினார்.
குளச்சல் பகுதியில் ஏடி.எம்-ஐ உடைத்து கொள்ளை அடிக்க முடிந்த அசாமி சேர்ந்த சம்சுல் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, குளச்சல் துறைமுகத்தில் வேலை பார்க்கும் உறவினரை பார்க்க வந்ததாகவும், அவருடன் சண்டை போட்டுவிட்டு அறையை காலி செய்து செலவுக்கு பணம் இல்லாததால் ஏடிஎம் ஐ உடைத்து பணத்தை எடுக்க முயன்றதாகவும் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்
Sorry, no posts matched your criteria.