India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பத்திரப்பதிவுத்துறையில் நடைபெறும் முறைகேடுகள், வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவைகளை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் அதிமுக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
அழிகால் ஜெகன் என்பவருக்கும், அவரது மனைவி ஜோஸ்லினுக்கும் இடையே தகராறு காரணமாக ஜோஸ்லின் தன் மகளுடன் பார்வதிபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனைவி ஜோஸ்லினை அரிவாளால் ஜெகன் வெட்டியதாக நேசமணிநகர் போலீஸார் ஜெகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி அசன் முகமது மனைவியை அரிவாளால் வெட்டிய ஜெகனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24 ஆம் நிதி ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து விருது வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு முதலாம் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.60,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.40,000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்
தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகியுள்ளது.இந்நிலையில் இன்று(அக்.1) இரவு 7 மணி வரை குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது அதிகம் பாதித்த 22 இடங்களில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம் 11 தோவாளை 13 கல்குளம் 3 விளவங்கோடு 25 திருவட்டார் 14 கிள்ளியூர் 10 இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திவுள்ளது.
குழித்துறை ஸ்ரீ ஐயப்ப சேவா சங்க தலைவர் ஜெயமோகன் தலைமையில் சங்க கூட்டம் நேற்று(செப்.,30) நடந்தது. அதில் பத்மநாபபுரத்திலிருந்து இன்று(அக்.,1) வருகை தரும் விக்ரகங்களுக்கு சாமியார் மடத்தில் சிறப்பான வரவேற்பு அளித்து, சிராயன்குழி முதல் சாங்கை, மார்த்தாண்டம், குழித்துறை மகாதேவர் ஆலயம் வரை அழைத்து வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் நேற்று(செப்.29) ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் போலீசார வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது என விதிகளை மீறிய வாகனங்கள் மீது 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.3.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் இன்று தெரிவித்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குவாரிகளில் இருந்து கல் மற்றும் எம் சாண்ட் எடுக்கப்பட்டு வருகின்றன. சில குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவையும் விட அதிகமாக கல் மற்றும் எம்சாண்ட் எடுக்கப்படுவதால் குமரி மாவட்டத்தில் இயற்கை வளம் அழிந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் குவாரிகளில் எடுக்கப்பட்ட கல் மற்றும் எம் சாண்ட் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குமரியை சேர்ந்த அருளப்பன் என்பவரது விசைப்படகில் கடந்த 11ம் தேதி குமரியை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேர் கொச்சியிலிருந்து மீன் பிடிக்க சென்றனர். அப்போது படகு பழுது ஏற்பட்டு ஓமன் நாட்டு கடலில் தத்தளித்த நிலையில் சரக்கு கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். தொடர்ந்து 12 பேரும் நாளை(அக்.,1) கொச்சி துறைமுகம் வர கடலோர காவல் படை, மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டதக என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.