India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி அரசுத்துறைகளில் கடந்த 5 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கியதாக 39 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2020 – 7, 2021 – 10 வழக்கு, 2022 – 7 வழக்கு, 2023 – 8 வழக்கு, 2024 – 7 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குகளில் கைதான பெரும்பாலானோர் சிறை தண்டனை பெற்றனர். இந்நிலையில், அரசு பணியாளர்கள் லஞ்சம் வாங்குவதை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கவேண்டும் என மேல் அதிகாரி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றன. கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவினர் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாநில விளையாட்டுப் போட்டிக்கு குமரி மாவட்டத்தில் இருந்து 843 விளையாட்டு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில போட்டி நாளை(அக்.,4) தேதி தொடங்குகிறது
துணை முதல்வராக உதய நிதி ஸ்டாலின் கடந்த வாரம் பதவி ஏற்றார். பத்மனாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் இன்று(அக்.02) சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், துணை முதல்வரின் பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்ததோடு, கலைஞர் கருணாநிதி குறித்த நூலை பரிசாக மனோ தங்கராஜ் அவருக்கு வழங்கினர்.
குமரிக் கடல் மற்றும் உள் தமிழக பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.அதன்படி இரவு 10 மணி வரை குமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.
காந்தியடிகளின் 156-வது பிறந்தநாளையொட்டி குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அவர்கள், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் முன்னிலையில் இன்று(02.10.2024) நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் கிராம அலுவலகத்தில், சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையினை தொடங்கி வைத்து வாடிக்கையாளருக்கு வழங்கினார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி விடுத்துள்ள செய்தியில்; காந்தி மகானின் பிறந்த தினத்தில் அவர் கற்றுத்தந்த பாதையை பின் தொடர சபதம் எடுப்போம். அவர் நமக்கு விட்டுச் சென்ற ஆயுதங்களைக் கொண்டு மத நல்லிணக்கம் தழைத்தோங்க போராடுவோம். வாழ்க மகாத்மா காந்தி புகழ் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் சூரியன் உதயம் ஆகும் காட்சியையும் மாலையில் மறையும் காட்சியையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக்.2) சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் கூடியிருந்தனர். ஆனால் மழை மேகம் காரணமாக சூரிய உதயம் இன்று தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், போதிய வசதி இல்லாத செயற்கை கருத்தரித்தல் மையங்களில் கடந்த மாதம் பிரசவம் பார்த்த 2 தாய்மார்கள் பிரசவத்தின்போது இறந்துவிட்டனர். கர்ப்பகால சிக்கல், பிரசவத்தின்போது தாய் – சேய் உயிர்பாதுகாக்கும் அனைத்து வசதிகள் கொண்ட மையங்கள் தாய்மார்களை பிரசவத்துக்கு எடுக்கொள்ள வேண்டும். வசதிகள் இலலாத நிலையங்கள் வெறும் கருத்தரிப்பு மையங்களாக செயல்பட முடியாது என்றுள்ளார்.
பள்ளிகளுக்கு வரும் 6 ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டும் அதை பின்பற்றாமல் உள்ளனர். எனவே இதை தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவில் மாநகரில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் உட்பட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மீது நேற்று(அக்.01) மொத்தம் 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மது அருந்திய ஒட்டுநரின் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவில் மாநகர போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.