India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காந்தி ஜெயந்தி நாளான அக்.,2 ஆம் தேதி நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் உட்பட உள்ள பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விடுமுறை தினமான அன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 36 கடைகள், 11 உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ குமார் நேற்று(அக்.,3) தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை வட்டாட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பயிர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று நீர்வள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அணைகளின் நீர் இருப்பை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் டீனாக இருந்த பிரின்ஸ் ஸ்ரீகுமார் ஓய்வு பெற்றதை அடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் கண் மருத்து பிரிவில் பேராசிரியையாக பணியாற்றிய ராமலெட்சுமி பதவி உயர்வு பெற்று ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு டீனாக நியமிக்கப்பட்டார். இந்த உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் இன்று வெளியிட்டார்.
செண்பகராமன் புதூர் பகுதியில் இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன் (அகஸ்தீஸ்வரம்). ரவி(குளச்சல்) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அதில் பிளாஸ்டிக் பொருட்கள் 3 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டதுடன் 2 உணவகங்களுக்கு மொத்தம் ரூ.4000 அபராதம் விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நடத்தப்படும் பெண்கள் தங்கும் விடுதிகள், கல்லூரி மாணவியர் விடுதிகள், மகளிர் விடுதிகள் அனைத்தும் உரிமம் பெற http://tnewp.com இணையதளத்தில் உடனே விண்ணப்பித்து நகலினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் அரசிடம் பதிவு மேற்கொள்ள விண்ணப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்தார். தவறினால் சட்டப்படி 2 ஆண்டு காலம் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றார்.
குமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று(அக்.02) வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்த்தாண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சேதமடைந்த நிலையில், அது சரி செய்யப்பட்டு போக்குவரத்து நடைபெற்ற வருகிறது. தற்போது மீண்டும் பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று அதில் கூறி உள்ளார்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 805 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 387 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 551 பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 554 பெருஞ்சாணி அணைக்கு 54 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை கடல் பகுதியில் 1.1 மீட்டர் உயரத்திற்கு பேரலைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் சேவை மையம் நேற்று(அக்.02) தெரிவித்துள்ளது. மேலும், கரையை நோக்கி அலைகள் கடந்து வரக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கடற்கரை பகுதிகளில் நீர் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி, திரு நயினார் குறிச்சி கபடி அணியை சேர்ந்த வீராங்கனையும், இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியுமான ரேஷ்மா 19 வயதுக்குட்பட்டோருக்கான தமிழக கபடி அணிக்கு தேர்வாகியுள்ளார். இவர், கடந்த வருடம் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கபடியில் தமிழக அணி சார்பில் விளையாடி முதல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழக கபடி அணிக்கு தேர்வாகியுள்ள ரேஷ்மாவுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். SHARE IT.
குமரி மாவட்டத்தில் நிகழாண்டில் ரூ.3.90 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு ரூ.3.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, 3 கிராமிய நூற்பு நிலையங்கள், 1 கதர் உப கிளை மற்றும் பிற உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன.
Sorry, no posts matched your criteria.