India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையை எதிர் கொள்வதற்கும், வெள்ள மீட்பு பணிகளில் பொது மக்களுக்கு உதவுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய என் 100 அல்லது 7010363173 எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். SHARE IT

குமரி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு <

குமரி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <

குமரி, கோடிமுனை பகுதி கப்பல் கேப்டன் கிளீட்டஸ் (50) கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அக்.20ம் தேதி நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதி லாட்ஜில் தங்கி இருந்தவர் நேற்று (அக். 21) அங்கு இறந்த நிலையில் காணப்பட்டார். கோட்டார் போலீசார் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் உடல் நலக்குறைவால் கிளீட்டஸ் இறந்தது தெரிய வந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இயற்கை வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் TN-Alert App ஐ கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஐ ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

உழவரை தேடி வேளாண்மை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் 4 வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24.10.2025 அன்று செண்பகராமன்புதுார், வெள்ளிசந்தை. ஆற்றூர் ஆகிய 3 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும், குமாரபுரம், சைமன் காலனி ஆகிய 2 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் நடைமுறை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக். 22) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 41.74அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.55 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 6.99 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 7.08 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 546 கனஅடி, பெருஞ்சாணிக்கு 511 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<

குமரி, கிராத்தூர் பகுதி பட்டதாரி சுஜின்(35) கிராத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.10,000 கடன் கேட்டுள்ளார். அங்கிருந்த செயலாளர் சுஜினின் உறுப்பினர் சேர்க்கை அங்கீகரிகபடவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பினார். இதனால் சுஜின் நேற்று (அக்.21) கூட்டுறவு அலுவலகம் முன்பு பதாகையுடன் கடன் கேட்டு போராட்டம் நடத்தினார். நித்திரவிளை போலீசார் சுஜினை காரில் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று எச்சரித்தனர்.
Sorry, no posts matched your criteria.