India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 45,000 க்கும் மேற்பட்டோர் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் இன்று வெளியிட்ட பாஜக சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மங்களூர் சென்ட்ரல் – கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இம்மாதம் 28ஆம் தேதி திருவனந்தபுரத்துடன் நிறுத்தப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் 29ஆம் தேதி கன்னியாகுமரி – மங்களூர் பரசுராம் ரயில் கன்னியாகுமரிக்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து காலை 6:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. SHARE IT.
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச் 26) 28.89 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.80 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 71 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று(மார்ச் 25) வெளியிட்ட செய்தி குறிப்பில், இம்மாதம் 28ஆம் தேதி மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. கூட்டத்தில் பங்கேற்கும் மீனவர்கள், அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனியாக மனுக்கள் வழங்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHARE IT.
#இன்று(மார்ச் 26) காலை 10 மணிக்கு ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலி 730 ரூபாய் வழங்க கேட்டு குளச்சல் நகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்.#காலை 10க்கு மணி தக்கலை திருமண மண்டபத்தில் சிபிஐஎம்எல் ‘Mass line’ மாநாடு.#காலை 10:30 மணிக்கு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க கேட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று குமரியில் கால்வாய்களை சீரமைக்க ரூ.13.32 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதலமைச்சருக்கும், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அதில் கலெக்டர் குறிப்பிட்டுள்ளார்.
குமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையாளர் தங்கம், மேலாளர் ஆனந்த், ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் நேற்று(மார்ச்.25) திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26 லட்சத்து 46 ஆயிரத்து 153 வசூலாகியிருந்ததாக தகவல். இது தவிர 4.5 கிராம் தங்கம், 32.950 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணங்களும் இருந்தன.
குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இன்று(மார்ச்.25) அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இணை ஆணையர் பழனிகுமார் உதவி ஆணையாளர் தங்கம் மேலாளர் ஆனந்த் ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26லட்சத்து 46ஆயிரத்து 153வசூலானது. இதுதவிர 4.500 கிராம் தங்கமும் 32.950 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு பணங்களும் வசூல் ஆனது.
குமரி ஆட்சியர் அழகு மீனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்புக் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கான “என் கல்லூரிக் கனவு” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி 30.03.2025 அன்று காலை 9.00 மணிக்கு வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது” என குறிப்பிட்டுள்ளார். *தெரிந்த மாணவர்களுக்கு பகிரவும்*
மும்பை-குமரி இடையே புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. முதல் முறையாக, இந்த ரயில் கரூர், திருச்சி வழியாக இயக்கப்படுகிறது.
வஎ. 01005/01006 ரயில் ஏப்ரல் 9 முதல் ஜூன் 25 வரை புதன் கிழமைகளில் இயக்கப்படுகிறது.
மும்பையிலிருந்து
செவ்வாய் இரவு 12:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறு மார்க்கத்தில் குமரியிலிருந்து
வியாழன் மாலை 4:45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ரயில் பயணிகளுக்கு பகிரவும்
Sorry, no posts matched your criteria.