Kanyakumari

News April 15, 2025

அரசு பஸ்களில் கியூ ஆர்கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் கியூ ஆர்கோடு மூலம் ஸ்கேன் செய்து டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 70% அரசு பஸ்களில் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் டவுன் பஸ்கள்,புறநகர் பஸ்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில் குமரி மாவட்டத்திலும் இது அமலுக்கு வந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 

News April 15, 2025

கன்னியாகுமரியில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பயிற்சி பிரிவில் 12 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-40 வயதிற்குட்பட்டவர்கள் ஏப்.25 க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு எவ்வித முன் அனுபவம் தேவையில்லை. இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 15, 2025

குமரி கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை 

image

 கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு 12 மணி முதல் (ஏப்.15) அமலுக்கு வந்துள்ளது. சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகம் கிழக்குக்கடல் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கிருந்து மீன்பிடிக்க செல்லும் 350 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராகிறார் சுரேஷ் ராஜன்

image

தமிழக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளருமான என்.சுரேஷ் ராஜன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் நாளை பதவி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

News April 14, 2025

குமரியின் அருமையான சுற்றுலா தலம்

image

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

குலசேகரத்தில் புத்தகக் கண்காட்சி ஏராளமானோர் பங்கேற்பு

image

குலசேகரம் கான்வென்ட சந்திப்பு மனுவேல் மண்டப வளாகத்தில் NCBH புத்தக நிலையம் சார்பில் இன்று தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியை அப்பகுதியில் உள்ள ஏராளமானவர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

News April 14, 2025

குமரியில் 2.68 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 920 பேருக்கு புற்றுநோய் தொடர்பான ஆரம்ப கட்ட பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6,538 பேருக்கு புற்றுநோய் வருவதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 133 பேர்க்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளதாக  ஆட்சியர் அழகு மீனா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 14, 2025

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 7944 பேர் கணக்கு தொடங்கினர்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக ஒரு நிதி ஆண்டுக்கு 250 முதல் அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் குமரி மாவட்டத்தில் கடந்த நிதியாண்டு 7,944 பேர் கணக்குத் தொடங்கியுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 13, 2025

இராமநாதபுரம்: திடீர் மின்தடையா? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.SHARE

News April 13, 2025

மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலாகிறது. ஆண்டு தோறும் மீன்கள் இனப்பெருக்க காலம் கடைபிடிக்கப்படும். மீன்கள் இனப்பெருக்க காலத்தையொட்டி, தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

error: Content is protected !!