India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜர் ஒரு சகாப்தம் என்ற புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.
குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, இன்று(அக்.05) காலை 10 மணிக்கு, திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட தோட்டமலை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெறும் பழங்குடியினருக்கான சிறப்பு குறை தீர்வு முகாமில் கலந்து கொள்கிறார் என நாகர்கோவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் 2024-வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்து இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள், நிறுவனங்கள் & வீடுகள் ஆகியவற்றை பருவமழையால் மாவட்டத்தில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு கட்டிடத்தின் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று கேட்டுக் கொண்டார்.
குமரி மாவட்டத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த வாலி என்ற சுயம்புலிங்கத்தை இன்று(அக்.04) தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஈத்தாமொழி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் உள்ள காவலர்கள் கைது செய்தனர்.
குமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் திருவிழா வரும் 12-ந் தேதி அன்று சிகர நிகழ்ச்சியாக பரிவேட்டை திருவிழா நடக்கிறது. அன்று ஒரு நாள் மட்டும் நடக்கும் இந்த திருவிழா கடைகள் 3 லட்சத்து 900 ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த திருவிழா கடைகளை சுசீந்திரம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் ஏலம் எடுத்துள்ளார்.
வன விலங்குகளை துன்புறுத்தும் நோக்கிலும், வேட்டையாடும் நோக்கிலும் வெடிபொருட்களை பயன்படுத்துவதும், வன விலங்குகளின் மீது சட்டவிரோத தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகள் மூலம் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பித்து இழப்பீடு பெறலாம் என நேற்று மாவட்ட வன அதிகாரி பிரசாந்த் கூறினார்.
நாகர்கோவில் மாநகரில் 10 இடங்களில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்க அரசின் அனுமதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று(அக்.,3) தெரிவித்தார். நாகர்கோவில் மாநகரில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாதவர்கள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குமரி மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம், முதிர்கன்னிகள் உதவித்தொகை போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதம்தோறும் மாற்றுத் திறனாளிகள் ரூ.1,500, மற்றவர்கள் ரூ.1,200 பெறுகின்றனர். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 13,962, தோவாளையில் 6,844, கல்குளம் 14,925, விளவங்கோடு 17,228, திருவட்டார் 7,776, கிள்ளியூர் 14,367 என மொத்தம் 75,102 பேர் பயனடைந்து வருவதாக தகவல்.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நெல்லை, குமரி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணலாலை மற்றும் தனியார் மணலாலைகள் மணல் எடுத்ததால் ஏற்பட்ட பாதிப்புகள், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்றவைகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளார்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்களில் ஆன்லைனில் பயிற்சித் தேர்வு நடந்து வருகிறது. நேற்று(அக்.,4) சமூக அறிவியல் தேர்வு நடந்தது. கூகுள் பார்ம் லிங்க் ஆசிரியர்கள் மூலமாக மாலை 6 மணிக்கு மாணவர்களுக்கு அனுப்பி ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது. இன்று அறிவியல், நாளை கணித பாட தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளால் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய ஊக்கம் பெறுவர்.
Sorry, no posts matched your criteria.