India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை(ஜன.5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தென் மாவட்ட பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். SHARE IT.

குமரி மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதிலும் குடிபோதையில் வாகனங்கள் ஒட்டியதாக 4988 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை நேற்று தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குமரி ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சிகளில் கண்புரை நோயாளிகளுக்கு இலவச கண்லென்ஸ் பொருத்தும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று(ஜன.4) மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் சாணி PHC-யில் முகாம் நடக்கிறது. 6ம் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் புத்தன் துறை PHC-லும், 23ம் தேதி தக்கலை ஊராட்சி ஒன்றியம் குமாரபுரம் PHC-லும், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பிலாங்காலை PHC-லும் முகாம் நடக்கிறது.

#இன்று(ஜன.4) காலை 7:45 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. #காலை 9 மணிக்கு கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை முன்பு 35வது நாளாக ESI திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. #மாலை 5 மணிக்கு மாணவி மீது பாலியல் கொடுமையை கண்டித்து செண்பகராமன் புதூர் பேருந்து நிலையம் அருகில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆழ்கடலில் மீனவர்கள் விபத்துக்குள்ளாகும்போது அவர்களை மீட்க நவீன முறையிலான திட்டத்தை கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற மீனவர் குறைதீர் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்க புதிய பயனாளிகளை தேர்வு செய்து 8ஆம் தேதிக்குள் பரிந்துரைக்கவும் கூறப்பட்டது.

2020ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை, கந்துவட்டி கொடுமை தொடர்பான பல வழக்குகளில் நாகர்கோவிலை சேர்ந்த காசி(29) கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதில் டிராவிட் என்பவர் வடசேரி போலீசில் அளித்த ரூ.2 லட்சம் கந்து வட்டி தொடர்பான வழக்கில், காசி & புரோக்கர் நாராயணுக்கு 3 ஆண்டு சிறையும், தங்கபாண்டியன் என்பவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நேற்று(ஜன.3) நீதிபதி தீர்ப்பளித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் நாகர்கோவில் மாநகரில் மட்டும் 107 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 374 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 927 பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.அனுமதித்த நேரம் மீறி இயங்கிய 2 லாரியை பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இம்மாதம் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் இதை போன்று நாகர்கோவிலில் இருந்தும் சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரயில் 13 மற்றும் 20ம் தேதியும் இயக்கப்படுகிறது. பெரம்பலூர், திருவள்ளூர், அரக்கோணம், சேலம், கரூர், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இந்த ரயில் நாகர்கோவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நாளை காலை 8.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார். மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கைப்பந்து போட்டியை தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு களியக்காவிளையில் உணவு திருவிழாவை தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு கருங்கல்லில் மௌன ஊர்வலத்தில் பங்கேற்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி இம்மாதம் 13 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்தும், 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது .செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, நெல்வேலி நாகர்கோவில் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.