India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் மேற்படிப்புக்காக அயர்லாந்து சென்ற நிலையில், 3ம் தேதி வெளிநாட்டிலிருந்து இந்தியன் எம்பஸி அதிகாரி என கூறி அவரது மகன் அழுவது போன்ற ஆடியோ பதிவு செய்து, அவரை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். அதை நம்பி ரூ.1.75 லட்சம் அனுப்பியுள்ளார். பின்னர் மோசடி என தெரியவந்ததை அடுத்து போலீசிடம் புகார் செய்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், நிபந்தனைகளின்படி https://www.tnesevai.tn.gov.in இணையத்தில் இ-சேவை மையங்களிலும் அக்.19ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று(அக்.05) தெரிவித்தார்.
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் மழை பாதிப்பு ஏற்பட்ட 28 இடங்களில் மழை தண்ணீர் தேங்கினால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், 9 ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குமரி பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 3ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி யானை பயன்படுத்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 48 ஊர் மக்கள் நாளை மறுநாள்(7ஆம் தேதி) கன்னியாகுமரியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இறைச்சிக் கடைகளில் திறந்த வெளியில் இறைச்சிகளை விற்பனை செய்வதை நேரில் பார்வையிட்டு இதுபோன்று விற்பனை செய்வது அனுமதிக்கத்தக்கது அல்ல. கடைகளின் முன்பு திரைச்சீலை போட்டு இறைச்சிகளை வெட்டி விற்பனை செய்ய வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பில், அன்னை சத்தியா நினைவு அரசு குழந்தைகள் காப்பகமானது நாகர்கோவில் பறக்கின்கால், குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வருகிறது. ஆணையின் அடிப்படையில் குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, தொழிற்பயிற்சிகள், மனமகிழ் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண் 04652 – 278980.
போதைப்பொருட்கள் நடமாட்டம், போதை பள்ளி மாணவ, மாணவியர்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை பற்றிய தகவல்களை குழந்தை பாதுகாப்பு 1098, மாவட்ட எஸ்.பி. ஆபீஸ் 81229 30279, மாவட்ட காவல் கண்காணிப்பு வாட்ஸப்குழு 70103 63173, காவல் கண்காணிப்பாளர். 94981 88488 கலெக்டர் 94441 88000 ஆகிய எண்களுக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த பிரின்ஸ் பயாஸ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய முதல்வராக ராமலட்சுமி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று(அக்.,4) பொறுப்பேற்றுக் கொண்டு செய்தியாளரை சந்தித்தார். அப்போது, மருத்துவக் கல்லூரிக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
தபால் துறையால் அக்.,7 முதல் 11 ஆம் தேதி வரை தேசிய தபால் வார விழா கொண்டாடப்படுகிறது. தபால் தலை சேகரிப்பு தினமான் 8 ஆம் தேதி அன்று மாணவ, மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகர்கோவில் அரசு ஊழியர் சங்கக் கட்டடம், தக்கலை தபால் நிலையங்களில் சிறப்பு தபால் தலை கண்காட்சி, வினாடிவினா போட்டி, கருத்தரங்கு நடக்கிறது என குமரிகோட்ட தபால் துறை தெரிவித்துள்ளது. SHARE IT.
மழை காலம் தொடங்கியுள்ள நிலையில், மழை & காற்றால் மின் கம்பிகள் அறுந்து தரையில் விழுந்து or தொங்கிக் கொண்டிருந்தால் அதனருகில் யாரும் செல்ல வேண்டாம். உடனடியாக உதவி செயற்பொறியாளர்கள் – 94458 54476, மக்கள் தொடர்பு அலுவலர் 94458 54477, மின் தடை அழைப்பு மையம் – 94458 59502 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்க வேண்டும் என குமரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் நேற்று(அக்.,4) கூறியுள்ளார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.