Kanyakumari

News October 20, 2024

உளவுத்துறை கண்காணிப்பதாக உதயகுமார் புகார்

image

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“ அழிக்கால் – பிள்ளைத்தோப்பு கடற்கரை கிராமத்தில் அண்மையில் கடல்நீர் உட்புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது; நான் அங்கு நண்பர்களுடன் சென்று தலைவர்களையும், மக்களையும் சந்தித்துப் பேசினேன்; அப்பாது, என்னை உளவுத்துறை போலீசார் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்து கண்காணித்தனர்” என குற்றச்சாட்டியுள்ளார்

News October 20, 2024

குமரியில் 4 நாளுக்கு பிறகு படகு போக்குவரத்து தொடக்கம்

image

குமரியில் கடந்த 4 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீர்மட்டம் தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்கள் காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு இன்று(அக்.,20) காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து வருகின்றனர்.

News October 20, 2024

தேங்காய்பட்டினம் துறைமுகம் சீரமைப்பு: திட்ட மதிப்பீடு தயாரிப்பு

image

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் துறைமுக பாலம் பகுதி விழுந்தள்ளது. இதனைத் தொடர்ந்து இதனை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. திட்ட மதிப்பீடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 20, 2024

நாகர்கோவில் – வள்ளியூர் ரயில் அந்தியோதையா இடையே ரத்து

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து அக்.,22ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா ரயில், வள்ளியூர் வரை மட்டுமே செல்லும். இந்த ரயில் வள்ளியூர் – நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. அக்.,23ம் தேதி மாலை 3.50க்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா ரயில், நாகர்கோவில் – வள்ளியூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 20, 2024

போக்குவரத்து விதிகளை மீறிய 627 பேர்கள் மீது வழக்கு

image

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று(அக்.,19) காலையில் இருந்தே  தீவிர வாகன சோதனை நடந்தது. போக்குவரத்து விதிகளை மீறிய 627 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களில் 200க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் டிரைவிங், அதிகவேகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

News October 20, 2024

குமரியில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை

image

தக்கலை, நாகர்கோவில், மார்த்தாண்டம், குமரி பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை நடக்கிறது. பருத்தி, பட்டுகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 11 மாத சந்தாதொகை செலுத்தினால் 12வது மாத சந்தாவை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, 30% தள்ளுபடியில் துணிகள் பெறும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ராஜேஷ்குமார் நேற்று கூறியுள்ளார். SHARE IT.

News October 20, 2024

குமரி ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

image

குமரியில் கடந்த 15-10-2024, 16-10-2024, 17-10-2024 ஆகிய நாட்களில் ஏற்பட்ட கள்ளக் கடல் சீற்றத்தினால் குறும்பனை முதல் நீரோடித்துறை வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் இரையுமன்துறை பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனை உடனடியாக சீரமைக்க கேட்டு குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இன்று இரவு கோரிக்கை மனு வழங்கினார்.

News October 19, 2024

குமரி மாவட்டத்திற்கு வந்த மாநில் நிர்வாகிகள்

image

குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழகத்தின் மாநில மருத்துவர் அணி தலைவர் கனிமொழியை, திமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் மற்றும் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வரவேற்றார். அவர்களுடன் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

News October 19, 2024

பொய்கை அணைப்பகுதியில் கரடிகள் நடமாட்டம்?

image

குமரி மாவட்டம் பொய்கை அணை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அணை பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதனை பார்வையிட்டுள்ளனர். கரடிகள் நடமாடுவதை கண்டவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். கரடி நடமாட்டத்தால் அங்கு விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

News October 19, 2024

“பெரியார் கருத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் தயாரா?”

image

தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம், நாங்கள் கேட்கிறோம், தூர்தர்ஷனில் மதபிரச்சார கருத்துக்களை ஒளிபரப்புவதற்கு ஈடாக, தினமும் மாலை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கருத்துக்களை ஒளிபரப்ப வேண்டும், ஒளிபரப்ப திராணி இருக்கிறதா? என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!