India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கடந்த 5-ம் தேதி நடந்த சோதனையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக நாகர்கோவில் சரகத்தில் 335, தக்கலையில் 291, குமரியில் 343, குளச்சலில் 209 பேர் என மொத்தம் 1,178 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விதிகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. சுந்தர வானம் நேற்று கூறினார்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குகான பேச்சுப்போட்டி நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் வரும் 15,16 தேதிகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என 1, 2, 3 ஆம் பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். SHARE IT.
குமரியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி, மதுரை, பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக தினசரி ரயிலை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டுப்பாளையத்திற்கு ரயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆரல்வாய் மொழியில் வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று(அக்.,6) குமரி வருகை தருகிறார். மாலை வழக்கறிஞர்கள் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் நாகர்கோவில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சந்திப்பு நிகழ்ச்சியில் ஈடுபடுன்றனர். பின்னர் திங்கள் நகரில் உறுப்பினர் சேர்க்கையில் பங்கேற்கிறார் என மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 272 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 127 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 548 பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின்அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 424 பெருஞ்சாணி அணைக்கு 174 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையில் மழை வெள்ளம் குறித்த விபரங்களை எளிதில் முன்கூட்டியே பொதுமக்கள் தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகள் செய்யும் வகையில் தமிழக அரசினால் வடிவமைக்கப்பட்டுள்ள ‘தமிழகம் அலர்ட்’ (TN-ALERT) என்ற செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
குமரி பகவதி அம்மன் கோவில் சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்து கடை கட்டி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என சிவசிங் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நேற்று இதை விசாரித்த நீதிபதி, கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும். நிலத்துக்கு தனி நபர் பட்டா பெற்றிருந்தால் அதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
குமரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண் 1077 ஆகும். வெள்ளப்பாதிப்பு ஏற்படும் இடங்களில் மழைக்காலத்தில் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். மழையின்போது மொட்டை மாடி, வயல்வெளி, திறந்த வெளிகளில் இடி மின்னல் தாக்க வாய்ப்புள்ளதால் அவ்வாறான இடங்களில் நின்று செல்போனை பயன்படுத்த வேண்டாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா தெரிவித்துள்ளார்.
தற்போது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கு தெரிந்த நபர்களை போலவோ அல்லது குடும்ப உறுப்பினரை போலவோ குரலில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இது போன்ற சைபர் கிரைம் மோசடிகளில் சிக்காமல் தற்காத்து கொள்ள குமரி மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நவராத்திரி விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06178) சென்னையிலிருந்து அக். 9 இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து அக்.10 இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும்.
Sorry, no posts matched your criteria.