India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்தியாவின் புனித தளமான காளி மலை உச்சியில் துர்க்காஷ்டமி முன்னிட்டு, நாளை கன்னியாகுமரியில் இருந்து சமுத்திரகிரி ரத யாத்திரை நிகழ்ச்சி துவங்குகிறது. வரும் வெள்ளிக்கிழமை மலை உச்சியில் புனித ஊர்வலம் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்க குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வருகிற 11ம் தேதி நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவிலில் நடைபெறும் இரட்சண்ய சேனை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இன்று வேளச்சேரியில் திருமாவளவனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசிய நிலையில், டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி நாகர்கோவில் மாநகர் விசிக மாநாடு நடத்தவும் அதில் திருமாவளவன் கலந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தளவாய் சுந்தரம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் சொத்து வரி, மின் கட்டண உயர்வு பத்திரப்பதிவுத்துறைய கட்டண உயர்வு போன்றவைகளை கண்டித்தும், போதை பொருள் விற்பனையை கண்டித்தும் நாளை மனித சங்கிலி போராட்டம் நாகர்கோவில் நடைபெற இருக்கிறது. இதற்கு அதிமுகவினர் திரண்டு வரவேண்டும்” என கேட்டுள்ளார்
குமரி மாவட்ட ஊராட்சி சாதாரண கூட் டம் வரும் 18ம் தேதி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியரக வளாக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தென்னக ரயில்வே, சுகா தாரத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, வரு வாய் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கப் பட உள்ளன என மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்ட் தாஸ் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.
கன்யாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி அழகிய நகர் பகுதி பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக இணைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். முன்னதாக மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் மத்திய இணை அமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் வழியாக பாஸ்போர்ட் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த சேவை மையம் வழியாக 50,000 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட தபால் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9715705825, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
குமரி மாவட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான்கள், கடமான்கள், போன்ற பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இவை சில நேரங்களில் மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. இவைகளை விரட்ட வனத்துறையினர் அவ்வப்போது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்டம் சாமி குச்சி மலைப்பகுதியில் யானைகள் கூட்டமாக நிற்பது கண்டறியப்பட்டுள்ளது. வனத்துறையினர் இதனை கண்டறிந்துள்ளனர்.
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(அக்.,7) கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கவும், போக்குவரத்து பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் வெளியில் செல்வோர் முன்னெசரிக்கையாக குடையுடன் செல்வது நல்லது.
மாதந்தோறும் மாநில பொதுப்பணித் துறை(நிலத்தடி) சார்பில் தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி செப்., மாதம் எடுக்கப்பட்ட ஆய்வில் யாகுமரி, நெல்லை உட்பட 21 மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் நன்கு மழைபொழிந்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.
Sorry, no posts matched your criteria.