India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று அறிவித்தார். அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குமரி மாவட்டத்தை பிரசவ மரணம் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(அக்.,21) அறிவுறுத்தினார். மகப்பேறு சிகிச்சைக்காக 24 மணி நேரமும் அரசு மருத்துவமனைகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், தனியார் மருத்துவமனைகள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
குமரி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி மற்றும் ஒலி மாசு இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்பி. சுந்தரவதனம் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒலி மாசு மற்றும் விபத்தில் தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி அருகே சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் வன்புணர்வு செய்த காதலன் மற்றும் சிறுமியிடம் அத்துமீறிய பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இரண்டு பேரை குமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காதலன் ஆல்வின், தகாத முறையில் நடக்க முயன்ற ரகுநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் 2007-ன் கீழ் கண்டிப்பாக 10 நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். அனுமதியின்றி நடத்தப்படும் முதியோர் இல்லங்கள் மூடப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று(அக்.,21) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 18 நொடிகள் இடைவெளியில் 1.2 மீட்டர் முதல் 1.4 மீட்டர் உயரத்துக்கு பேரலைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று(அக்.,22) இந்த நிலை நீடிக்கும் என இந்திய கடல் தகவல் சேவை மையம் நேற்று அறிவித்துள்ளது. எனவே கடலுக்கு செல்லும் மீனவர்கள், கடலோர பகுதிகளில் வசிக்கிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE IT.
கனிம வளங்களை கொண்டு செல்ல போலி அரசு முத்திரை, அனுமதி சீட்டு அச்சடித்த பிறஸ் உரிமையாளர், பணியாளர் மற்றும் லாரி ஓட்டுநர்கள் நான்கு பேரை நேற்று தக்கலையில் வைத்து தனிப்படை உதவி ஆய்வாளர்கள் மகேஷ்வரராஜ் மற்றும் ஆறுமுகம் குழுவினர் கைது செய்தனர். மேலும் 2 கனரக வாகனங்கள் ஒரு சொகுசு கார் 2000 போலி அனுமதி சீட்டு, முத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.. மோசடியில் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகர்கோவில் வல்லன் குமார விளையை சேர்ந்தவர் கோகுல், என் ஜி ஓ காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர்கள் இருவரையும் சரக்கல்விளை பூங்காவில் வைத்து மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த இரண்டு பேரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த கோட்டாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அகில பாரத இந்து மகாசபை மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாநிலத் தலைவர் தா. பால சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மகாசபை மாநில இணை அமைப்புச் செயலாளராக துரைராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் இந்து மகாசபை மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவு வங்கி பணியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது, “நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையின்போது, குறைவு அல்லது கூடுதல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை இருமடங்காக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
Sorry, no posts matched your criteria.