India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) பணியாற்றி வந்த சுசிலா பீட்டர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பழனிவேல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் 47 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <

கரும்பாட்டூரை சேர்ந்தவர் கண்ணன் (42) தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மது குடித்துவிட்டு வீட்டின் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். கண்ணன் மது குடிப்பதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் கண்ணன் விஷம் குடித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டார். தென் தாமரைகுளம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் டிசம்பர் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி நீதிமன்ற வளாகத்திலும் மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற உள்ளது.

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலர் ஆல்பர் மதியரசு விடுப்பில் சென்றதைத் தொடர்ந்து அரவிந்த் ஜோதி நாகர்கோவில் நகர் நலஅலுவலர் பொறுப்பில் இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலராக தேனி சுகாதாரப் பிரிவை சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் பொறுப்பினை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.