India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சார்பில் குலசேகரத்தில் மே தின விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (மே 1) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நடைபெற்ற பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாற்றங்கால் பணிகளை தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொண்டு மே மாத இறுதிக்குள் பணிகளை முடித்து ஜூன் மாத தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணிகளை மேற்கொள்ள முன் ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.
குமரி மாவட்டத்தில் ஊர் காவல் கண்காணிப்புத் திட்டத்தை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி ஒரு கிராமத்தில் ஒரு காவலர் பணியமர்த்தப்பட்டு இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 761 கிராமங்களில் 1522 கேமராக்கள் பொருத்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளது.
குமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் குழித்துறை பத்மநாபபுரம் இரணியல் பூதப்பாண்டி ஆகியவற்றில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தொண்டு புரிய ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர சமூக சேவை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணை குழு செயலாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.
காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
வனத்துறை அலுவலர் -4652276205
வருவாய் அலுவலர் -4652278725
சார் நிலை ஆட்சியர் -4651250722
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் -4652236729
ஆதி திராவிட நலத்துறை அலுவலர் -4652232023
மண்டல மேலாளர், நுகர்பொருள் வாணிப கழகம் -4652260224
மேற்பார்வை பொறியாளர், மின்சார வாரியம் -4652230011
துணை இயக்குனர், விவசாயம் -4652275391
கோட்டாட்சியர் , நாகர்கோவில் -4652279833 *ஷேர்
மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
மே தினத்தை யொட்டி CPIML லிபரேஷன் சார்பில் திங்கள் நகரில் ஒப்பந்த ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; மாதம் 36 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாலை 4 மணிக்கு பேரணி நடைபெறுகிறது.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடத்தில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் வரை CITU, AITUC, JCTU சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (மே.2) குமரி மாவட்டம் வருகிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். நாகர்கோவில் திமுக மாநில மீனவர் அணி செயலாளர் இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
Sorry, no posts matched your criteria.