India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடுக்கரை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (44). இவர் அப்பகுதியில் உள்ள தம்பரான் கோயில் – முத்தாரம்மன் கோயிலில் அறங்காவலராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சாமிகளுக்கான 45 பவுன் நகைகளில், 21 பவுன் நகைகளை திருடி அடகு வைத்த விவரம் தற்போது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தற்போதைய கோயில் அறங்காவலர் சேத்திரபாலன் போலீசில் அளித்த புகாரின் பேரில் அய்யப்பனை நேற்று (ஜன.9) போலீசார் கைது செய்தனர்.

குமரி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும்.

மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் அகிலாஸ் (37). கடந்த 2015-ல் லைசா என்ற பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த அகிலாஸ் 2023-ல் ஒரு பெண்ணுடன் பழகி அவரையும் கொலை செய்தார். இந்த கொலை வழக்கிலும் ஜாமீனில் வந்த அகிலாஸ் 6 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று முன் தினம் செண்பகராமன்புதூரில் வைத்து அகிலாஸை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரல்வாய்மொழி சாலமன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் (43). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் ஜன.8 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி செய்த போலீசாருக்கு பணியிட மாற்றம் கவுன்சிலிங் அடிப்படையில் ஆயுதப்படையில் வைத்து மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்று (ஜன-9) நடைபெற்றது. இதில் 72 போலீசாருக்கு அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கவுன்சிலிங் முறையில் பணியிடமாற்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஐபிஎஸ் -ஆல் வழங்கப்பட்டது.

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

குமரியில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த ’இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16-35 வயதுடையோர் பங்கேற்கலாம். தடகளம், கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு ரூ.1,000 – ரூ.75,000 வரை பரிசு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.21க்குள் இங்கு <

குமரி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.குமரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04652-291744
2.தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
3.Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம் சாலைப் பணிகளுக்காக சேதமடைந்த குளங்களை மீண்டும் புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துனர். கோரிக்கையினை ஏற்று சம்மந்தப்பட்ட பொறியாளருக்கு 70% பணி நிறைவடைந்த பகுதிகளில் குளங்களை உடனடியாக செப்பனிட்டு மீள பயன்பட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று (ஜன.8) உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.