India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் சமீபகாலமாக இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி மக்களை அச்சுறுத்தம் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் நபர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். *சாகசம் செய்வோருக்கு பகிர்ந்து அறிவுரை கூறுங்கள்*
மும்பை-குமரி இடையே, கோடை கால சிறப்பு ரயில் ( ரயில் எண் : 01005) ஏப்ரல் 9 அன்று மும்பையில் இருந்து 00:30 கிளம்பி ஏப்ரல் 10 அன்று 1:15 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். மும்பை, தாதர், புனே, கிருஷ்ணராஜபுரம், திருப்பத்துர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக குமரி வந்தடையும். இந்நிலையில, இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. *தேவைபடுவோர் மறக்காம முன்பதிவு பண்ணிக்கோங்க
குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(மார்ச்.30) 29.00 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.60 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.62 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.72 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 30 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 27 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
கன்னியாகுமரியை புதிய நகராட்சியாக உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையின் பேரில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, போளூர், செங்கம், கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி உள்ளிட்ட 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அரசிதழை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3500 கோடி ஒதுக்கப்பட்டடுள்ளது. அதன் அடிப்படையில், குமரி மாவட்டத்தில் முதற்கட்டமாக 1257பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை எளிய 706 குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் அரசு வழிகாட்டுதலின் படி மாவட்ட அளவிலான குழுஒப்புதல் அளிக்கப்பட்டு முதற்கட்டமாக 50 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அஞ்சுகிராமம் வடக்கு பஜாரில் உள்ள நகைக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை கடையின் பூட்டை உடைத்து 55 பவுன் நகை மற்றும் 15 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், அஜித், அசோக் ,சுரேஷ் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
தக்கலை அருகே 13.3.2025 அன்று 2 பள்ளி மாணவிகள் மாயமாகினர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் குமார் மாணவிகளை பைக்கில் ஏற்றி சென்று, ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, போக்சோவில் கைது செய்யப்பட்ட அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க குமரி கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து இன்று அவர் சிறையிலடைக்கப்பட்டார். *வக்கீலின் இச்செயல் குறித்த உங்கள் கருத்து?
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ், வியாபாரி. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி சென்றார். அங்கிருந்து இன்று காலை பேருந்தில் நாகர்கோவில் வந்தார். வடசேரி பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அங்கிருந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist, Health Visitor என 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 12 ஆம் வகுப்பு , any Degree, B.Pharm, D.Pharm, Diploma, DMLT தபடித்தவர்கள் ஏப்.5 வரை விண்ணப்பிக்காலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.13,000 முதல் ரூ.19,800 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே <
Sorry, no posts matched your criteria.