India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரியில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க

நேசமணி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் (58). அக்.24-ந் தேதி இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராஜனிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். திடீரென உடல்நலக்குறைவால் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நலம் தேறியதை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

குமரி ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தவறான கருத்துக்களை பொதுமக்களிடம் பரப்பி வருகிறார்கள். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீது தவறான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025 காலை 11.00 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை(அக்.30) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற இருந்தது. இதில் ஆட்சியர் தேர்தல் ஆணைய காணொளி காட்சியில் கலந்து கொள்ள இருப்பதால் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் நவ.15 முதல் ஜன.15 வரை சீசன் காலமாகும். இந்த 60 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் லட்சக்கணக்கில் இங்கு வந்து செல்கின்றனா். சீசன் காலத்தில் வருவாயை பெருக்கிக் கொள்ளும் விதமாக, தற்காலிக சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 62 சீசன் கடைகள் மற்றும் காா் பாா்க்கிங் ரூ. 1 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பி<
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

குமரி மக்களே உங்க பைக், கார் பழைய இன்சூரன்ஸ் இல்லையா?? இதனால உங்களுக்கு அபாராதம் விழுகுதா? இதற்கு தீர்வு உண்டு!
1. இங்கு <
2. அதில் “Insurance” (அ) “Motor Insurance Policy” செலக்ட் பண்ணுங்க
3. உங்கள் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை தேர்ந்தெடுங்க
4. வாகன எண்.
5. பழைய இன்சூரன்ஸ் கிடைத்து விடும். இதை நீங்க போனில் சேமித்து கொள்ளலாம்.
SHARE பண்ணுங்க.

மோந்தா புயல் எதிரொலியாக ரயில் எண்: 17235 எஸ்எம்விடி பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எஸ்எம்விடி பெங்களூருவில் இருந்து 29ம் தேதி மாலை 5.15 மணிக்கு புறப்படுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குமரியில் இருந்து அக்27ல் புறப்பட்ட ரயில் எண் 22503 கன்னியாகுமரி -திப் ரூகார் விவேக் எக்ஸ்பிரஸ் வாராங்கல், பிலாஷ்பூர், ஜர்சுகுடா, ரூர் கேலா, காரக்பூர் வழியாக திருப்பிவிடப்பட் டுள்ளது.
Sorry, no posts matched your criteria.