India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (14.11.2024) தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ர.சக்தி காவியா, அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு, செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்வது வழக்கம். தற்போது கீழ்கதிர்பூர் உள்ளிட்ட 13 ஊராட்சிகளில், சமூக தணிக்கை நடைபெறுகிறது. இதற்கு, சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (நவ.15) நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் 200க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்பட இருந்த டிஜிட்டல் முறை மதுபான விற்பனை, தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பழைய மதுபானங்கள் விற்றுத் தீர்ந்த பின், நாளை முதல் புதிய டிஜிட்டல் முறையை தொடங்க காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில், இன்று குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. “பெண்கள் கல்வி ஆகாயத்தின் வெளிச்சம். நாங்கள் குழந்தை திருமணத்தை ஆதரிக்க மாட்டோம். குழந்தைகளுக்கான உரிமையை நாம் உறுதிப்படுத்திடுவோம்” உள்ளிட்ட வாசகப் பலகை கைகளில் ஏந்தியபடி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ஆட்சியர் பேரணியை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (நவ.15) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வினை நடத்த உள்ளனா். 8, 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு முடித்தவா்கள், ஐடிஐ படித்தவா்கள் தோ்வு செய்யவுள்ளனா். மேலும் விவரங்களுக்கு, 044-27237124
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை 10 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைப்பயணப் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியை, மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைக்க உள்ளார்கள். இதில், துறை சார்ந்த அலுவலர்கள், அரசு அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் இன்று (நவ.14) காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், மழை காரணமாக சாலைகளில் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கவும் வாய்ப்பும் உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியே செல்லுங்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 டாஸ்மாக் கடைகளில் இன்று (நவ.14) முதல் மதுபாட்டில்களுக்கு டிஜிட்டல் முறையில் பில் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்துக்கு ₹294 கோடி மதிப்பிலான பணியாணை வழங்கப்பட்டது. இதற்காக கடந்த சனிக்கிழமை முதல் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க
குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் கிருஷ்ணா கார்டன் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதி ஆட்கள் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர் 4 வீட்டில் இருந்த 1.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றார். வெளியூர் சென்று வீட்டிற்கு வந்த வீட்டின் உரிமையாளர்கள் இந்த திருட்டுச் சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து திருடர்களை தேடி வருகின்றனர்.
விச்சந்தாங்கலில் இன்று (13.11.2024) மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரா.ராஜ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.