Kanchipuram

News January 13, 2025

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்களும், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்கள் என மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில், 21.01.2025 முதல் 24.01.2025 வரை பின்வரும் கிராமங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, மக்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனு செய்து பயன் அடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படுகிறது.

News January 13, 2025

மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலுவலர் பணி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி, மாவட்ட அளவிலான கண்காணிப்பு அலகில் பணியாற்ற ஒருவர் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான விண்ணப்ப படிவம் காஞ்சிபுரம் மாவட்ட இணையதள முகவரியான https://Kancheepuram.nic.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மேற்படி விண்ணப்ப படிவத்தினை ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 13, 2025

கொசு வலையுடன் வந்த ஒன்றிய கவுன்சிலர்

image

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் மொத்தம் 58 ஊராட்சிகள் உள்ளன. அதேபோல் 16 ஒன்றிய குழு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மன்றகூட்டம் நடைபெற்றது. ஶ்ரீபெரும்புதூர் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு என பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, 2 ஆவது வார்டு சுயேட்சை கவுன்சிலர் தியாகராஜன் கொசு வலையை போர்த்தியவாறு கூட்டத்திற்கு வந்தார்.

News January 13, 2025

தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக தொழுநோய் மருத்துவர், பேச்சுப்பயிற்சியாளர், செவித்திறன் பயிற்சியாளர், அறிவாற்றல் பழக்குனர் ஆகிய 4 பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்ற. விபரங்களை https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன 17ம் தேதி மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டுமென காஞ்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 12, 2025

விவசாய மண்ணின் தரத்தை காக்க மண்வள அட்டை

image

காஞ்சிபுரத்தில் பெரும்பாலான விவசாயிகளின் விளை நிலங்களில், அளவுக்கு அதிகமாக உரம் போட்டு, மண்ணின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த, நிலத்தில் காரம், அமிலம், உப்புத்தன்மை மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் ஆகிய உரங்கள் போட வேண்டும் என விளக்கும் தகவல்கள் அடங்கிய மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. நடப்பு 2024 – 25ஆம் நிதியாண்டில் 7,100 பேருக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு

image

பொன்னேரிக்கரையில் உள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நுழைவு பகுதியிலேயே புறநகர் பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு நிலமான 19 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. பரந்துார் விமான நிலையம், புறநகர் பேருந்து நிலையம் என சகல வசதிகளும் இப்பகுதியை சுற்றிலும் அமைகின்றன. இதனால் வீட்டு மனைகள் விற்பனை விலை அதிகமாகியுள்ளது.

News January 12, 2025

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர அழைப்பு

image

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார். நவரை பருவத்தில் சாகுபடி செய்யப்படும் 1 ஏக்கர் நெற்பயிருக்கு 518 ரூபாய் வழங்கப்படுகிறது. நிலக்கடலைக்கு 482 ரூபாய், ஏக்கர் கரும்பு பயிரிடும் விவசாயிகள், 1,160 ரூபாய் பிரீமியம் கட்டணமாக மார்ச் 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 12, 2025

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் ஜன.12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் முதல் டெல்டா வரை மற்றும் தூத்துக்குடி பகுதிகளிலும் மழை பெய்யும். பொங்கல் விடுமுறை நாள்களில் மழை பெய்வது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. ஆனால், இந்த மழை ஒன்றும் உங்களது விடுமுறைக் காலப் பயணங்களை பாதிக்காது என நம்பபடுகிறது. ஷேர் பண்ணுங்க

News January 12, 2025

மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்த தவெகவினர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானநிலையம் அமைய உள்ள நிலையில் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் சந்தித்து கலந்துரையாட உள்ளார். இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு இன்று (ஜன.11) காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் தவெக வழக்கறிஞர் வெங்கட் மற்றும் தவெக பொருளாளர் தலைமையில் மனு அளித்தனர்.

News January 11, 2025

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய் திட்டம்

image

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் முடிந்த பிறகு ஜனவரி மூன்றாம் வாரத்தில் இந்த சந்திப்பு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!