Kanchipuram

News January 19, 2025

அம்பேத்கர் திடலா? தனியார் மண்டபமா?

image

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை, தவெக தலைவர் விஜய் நாளை பரந்தூர் அம்பேத்கர் திடலில் சந்திக்க காவல்துறையினரிடம் அனுமதி கோரி இருந்த நிலையில் தனியார் திருமண மண்டபத்தில் அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகிள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தவெக கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினருடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

News January 19, 2025

காஞ்சிபுரத்தில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க

News January 19, 2025

பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகும் ‘மாஸ்டர் பிளான் – 4

image

‘நைட் பிராங்க்’ நிறுவனத்திடம், மாஸ்டர் பிளான் தயாரித்து வழங்கும் ஆணை வழங்கப்பட்டு உள்ளது. அந்நிறுவனம், தன் பணிகளை தொடங்கியுள்ளது. இரண்டு – மூன்று கருத்துரு அடங்கிய அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். அதில் ஒன்றை தேர்வு செய்து, அதற்கேற்ப ‘டவுன்ஷிப்’ உருவாக்கப்பட உள்ளது. டவுன்ஷிப் உருவாக்கும் பணி முடிவடையும் வரை, நைட் பிராங்க் நிறுவனம், டிட்கோவுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

News January 19, 2025

பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகிறது ‘மாஸ்டர் பிளான்’ – 3

image

பரந்துார் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு, 245 ஏக்கரில் வீடு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ‘டவுன்ஷிப்’ உருவாக்கி தரப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, ‘மாஸ்டர் பிளான்’ எனப்படும் முழுமை திட்ட அறிக்கையை உருவாக்கி தரும் பணிக்கு ஆலோசகராக, ‘நைட் பிராங்’ நிறுவனத்தை ‘டிட்கோ’ நியமித்துள்ளது. திட்ட அறிக்கை தயாரித்து தரும் ஆலோசகரை தேர்வு செய்ய 2024 செப்டம்பரில் டெண்டர் கோரியது.

News January 19, 2025

பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகும் ‘மாஸ்டர் பிளான் – 2

image

பரந்துார் விமான நிலைய திட்டம், 4 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. திட்ட செலவு ரூ.29,150 கோடி. முதல்கட்ட கட்டுமான பணியை 2026 ஜனவரியில் தொடங்கி 2028இல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கடுத்த ஆண்டில் இருந்து ஆண்டுக்கு, 2 கோடி பயணியரையும், இறுதிகட்ட பணிகள் முடிவடையும் போது ஆண்டுக்கு, 10 கோடி பயணியரையும் கையாளும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

News January 19, 2025

பரந்துார் ஏர்போர்ட் திட்டத்துக்கு தயாராகும் ‘மாஸ்டர் பிளான்’ – 1

image

தமிழகத்தில் முதன்முறையாக பரந்துார் விமான நிலையத்தை தமிழக அரசு, பொது – தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, ‘டிட்கோ’ எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம் உள்ளது. பரந்துாரை சுற்றியுள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில் 2ஆவது விமான நிலையம் அமைய உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் இருந்து, 3,774 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

News January 19, 2025

எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் சந்திக்கலாம்

image

தவெக தலைவர் விஜய் நாளை பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திக்க உள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது, “மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்று. மற்ற மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களைவிட சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. போராடுபவர்களை எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் நேரில் சென்று சந்திக்கலாம்” என்றார்.

News January 19, 2025

ஏகனாபுரம் திடலில் சந்திக்க உள்ளதாக தகவல்

image

நாளை மறுநாள் (ஜன.20) காலை 10 மணி முதல் பகல் 1 மணிக்குள் சந்திக்க காவல்துறை அனுமதி எனவும் தகவல் வெளியாகி உள்ளது, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்களை ஏகனாபுரம் திடலில் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

News January 19, 2025

விஜய்க்கு கட்டுப்பாடுகள் இல்லை

image

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக 908 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். இதற்காக போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நாளை (ஜன.20) விஜய் வந்து செல்ல போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதற்காக எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மக்களை சந்திப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

News January 19, 2025

காஞ்சிபுரத்தில் விடிய விடிய மழை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், மாம்பாக்கம், வல்லம், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இன்றும் (ஜன.19) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!