Kanchipuram

News October 13, 2025

காஞ்சி: 12th போதும், ராணுவத்தில் வேலை!

image

காஞ்சி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் காலியாக உள்ள 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. ஒருவருக்காவது பயன்படும்.

News October 12, 2025

மருந்து தொழிற்சாலையில் செல்வபெருந்தகை ஆய்வு

image

காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சீசன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குழந்தைகள் மருந்து உட்கொண்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தற்போது அந்த தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த தொழிற்சாலையை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News October 12, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரத்தில் இன்று (அக்-12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கொண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. SHARE NOW

News October 12, 2025

காஞ்சிபுரம்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

காஞ்சிபுரம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு<> AAVOT.COM<<>> என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்

News October 12, 2025

காஞ்சி: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு (16.10.2025) கடைசி நாள் ஆகும். SHARE பண்ணுங்க!

News October 12, 2025

காஞ்சி: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27237139) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க

News October 12, 2025

காஞ்சி: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

காஞ்சி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News October 12, 2025

காஞ்சி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

காஞ்சி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News October 12, 2025

காஞ்சியில் இன்றே கடைசி-APPLY NOW

image

காஞ்சி மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. விண்ணப்பிக்க இன்றே கடைசி. SHARE பண்ணுங்க மக்களே. ஒருவருக்காவது உதவும்!

News October 12, 2025

காஞ்சி மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் நாளை (அக்டோபர் 13) காலை 9 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை, கோரிக்கை மனுக்களாக அளித்து பயன்பெற மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!