India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
திருவண்ணாமலை மாவட்டம், துாசி கிராமத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரம் இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆஃப் இந்தியா பயிற்சி பள்ளி மாணவர்கள் 60 பேர் பங்கேற்றனர். அதில், 22 மாணவர்கள் முதல் இடம், 14 மாணவர்கள் 2ஆம் இடம், 11 மாணவர்கள் 3ஆம் இடம் என வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.
மேவலூர்குப்பத்தை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பவானிக்கு கடையில் வேலை செய்யும் மதன் என்பவரோடு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த ஹரி இருவரையும் பிரித்துள்ளார். பிரிவை தாங்க முடியாத இருவரும் கூலிப்படைக்கு பணம் தந்து ஹரியை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதை அறிந்த ஹரி காவல்துறையில் புகார் அளித்த பெயரில் பவானி மற்றும் மதன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் உழவர் சந்தையின் இன்றைய (ஆக.18) காய்கறி விலை நிலவரம். (1 கிலோ) தக்காளி ரூ.50-60, உருளைக்கிழங்கு ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.55-65, பெரிய வெங்காயம் ரூ.20-25, பச்சை மிளகாய் ரூ.35-40, கத்தரிக்காய் ரூ.35-40, வெண்டைக்காய் ரூ.35-40, முருங்கைக்காய் ரூ.55-60, பீர்க்கங்காய் ரூ.35-45, சுரைக்காய் ரூ.15-25, புடலங்காய் ரூ.25-35க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்.
காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வார்டு எண்.19-ல் நாளை (ஆக.19) “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” சாய் மனோன்மணி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது என கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத பெண்கள் உரிய ஆவணங்களுடன் இம்முகாமில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காஞ்சி மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <
▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.