India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 5 பேர் காயம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வந்தது. அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்தபோது 4 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2025 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. குறைகள் உள்ள ஓய்வூதியதாரர்கள் 07.02.2025-க்குள் முறையீடுகளை மூன்று நகல்களில் அனுப்பி வைக்க வேண்டும். கூட்டத்தில் ஒவ்வொரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி மட்டும் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல எலக்ட்ரானிக் தொழிற்சாலை ஆன சாம்சங் தொழிற்சாலையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொழிற்சங்கம் அமைக்க தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக, அரசை கண்டித்து, வரும் ஜனவரி 31ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக சிஐடியூ அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் களியாம்பூண்டி பகுதியில் உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணி மண்டபம், களியாம்பூண்டி மேல்பாக்கம், திருப்பிலிவனம், மருதம், ஆண்டித்தாங்கல், மாகறல், ஆர்ப்பாக்கம், களக்காட்டூர் ராவத்தநல்லூர் கண்டிகை, ஆலத்தூர், உக்கல், கூழமந்தல், அத்தி, இளநீர் குன்றம் ஆகிய இடங்கள். மேற்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.01.2025) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார். உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மு.பிச்சாண்டி இருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களியாம்பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் உத்திரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டிதாங்கல், களக்காட்டூர், இளையனார் வேலுார், காவாந்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் இன்று (ஜன.26) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன. எனவே பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..
கைத்தறி துணி நூல் இணை இயக்குனர் இன்று முதல் பட்டு கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்து அளிக்கப்படும் உறுப்பினர்களுக்கு பணம் ரொக்கமாக தரப்படாது என்றும், அது வங்கி பரிவர்த்தனை மூலமே அளிக்கப்படும் என சுற்றறிக்கை அளிக்கப்பட்டு இன்று முதல் அதனை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பங்காரு அம்மன் காலனியில் உள்ள கைத்தறி துணி நூல் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நெசவாளர்கள் ஆர்பாட்டம்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, நாளை குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளை வே2நியூஸில் பதிவிடுங்கள். உங்கள் ஊர் செய்திகள் வே2நியூஸ் மூலம் அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? <
Sorry, no posts matched your criteria.