India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் அருகே கண்டிகை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, நேற்று காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஒரகடம் கண்டிகை சந்திப்பில் உள்ள வட மாநில இளைஞர்கள் தங்கியுள்ள அறையில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த, கோபி ருடாஸ், 25, என்பவரை கைது செய்தனர்.
படப்பை, மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் இவரது மனைவி பிரியதர்ஷினி இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகின்றன. குழந்தைகள் ஏதும் இல்லை. இதனால் பிரியதர்ஷினி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரவணகுமார் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சம்பளம் ரூ.50,000 முதல் – ரூ.1,80,000 வரை வழங்கப்படும். வரும் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
காஞ்சிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.6) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக்நகர், ஏனாத்தூர், வையாவூர், இந்திராநகர், வேளியூர், வையாவூர், இருங்காட்டுக்கோட்டை, காட்ராம்பாக்கம், கீவளூர், தண்டலம், மேவலுார் குப்பம், செட்டிபேடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நாளை முதல் பிப்.9-ஆம் தேதி வரை காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 12 மாவட்டங்கள், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். தெலுங்கானா, ஆந்திராவைச் சேர்ந்த உதவி செவிலியர்கள், சிப்பாய் பார்மா பிரிவுகளில் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கல்வி உதவித்தொகைக்கு, மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.28 எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக பல்வேறு மருத்துவத் துறையில் உள்ள 276 காலி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kanchipuram.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ்களின் நகல்களுடன் பிப்.20 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாளை ஒட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் நேற்று திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி வருகை தந்து பேரறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் திமுக உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொள்ளுமணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், சக்தி நகர் ஆகிய இடங்கள். மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது தாய் பொன்னம்மாள் இருவரையும், அத்தை மல்லிகா உள்ளிட்ட 5 பேர் கடந்த 2014இல் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராஜேஷ் (32), மல்லிகா (56), சந்திரசேகரன் (40), ஆகிய மூவருக்கும் 5 ஆண்டுகளும், முத்து (55), குமார் (48), ரமேஷ் (36) ஆகிய மூவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை யும் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.