Kanchipuram

News February 10, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி மாதத்திற்கான சிறப்பு குறைதீர் கூட்டம், வரும் 12ஆம் தேதி மாலை 3:00 மணிக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பங்கேற்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.

News February 9, 2025

வரதராஜ பெருமாளை தரிசித்த பக்தர்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத ஏகாதசியையொட்டி, நேற்று (பிப்.8) ஸ்ரீதேவி – பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் உலா வந்தார். அப்போது பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இதில், காஞ்சிபுரம் மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 9, 2025

முன்னாள் அமைச்சரின் மனைவி உடலுக்கு அமைச்சர் அஞ்சலி

image

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்தவர் க.சுந்தரம். இவர், கடந்த திமுக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். இவரது மனைவி எழிலினி சுந்தரம், நேற்று முன்தினம் (பிப்.7) மாலை 6 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நேற்று (பிப்.8) கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான காந்தி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

News February 9, 2025

கூட்டு பாலியல் வன்கொடுமை: 6 பேர் மீது புகார்

image

சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண், தனது நிலத்தை விற்று செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு முழு பணத்தை கொடுக்கவில்லை. இதை கேட்கபோன அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News February 8, 2025

யார் இந்த பிட்டர் கண்ணன்?

image

காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது 1994இல், குழாய் சுத்திகரிப்பாளராக கண்ணன் பணியில் சேர்ந்துள்ளார். 2015இல், பிட்டராக பணி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார். 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதால், குடிநீர் இணைப்புக்கு வசூல் செய்ய இவருக்கு ஏதுவாக இருந்துள்ளது. அதிகளவு சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக கிடைத்த தகவலால், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.

News February 8, 2025

சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் செய்த இளைஞர் கைது

image

காஞ்சிபுரம், கிளம்பி பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவரது மகன் விஷ்ணு, 14 வயது பள்ளி பயிலும் மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் விஷ்ணுவை நேற்று (பிப்.7) போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 8, 2025

பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.8) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கருப்படித்தட்டை, உத்திரமேரூர் வட்டத்தில் பெருங்கோழி, வாலாஜாபாத் வட்டத்தில் மாகரல், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் பால்நல்லூர், குன்றத்தூர் வட்டத்தில் நாவலூர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டில் திருத்தும் செய்ய விரும்புபவர்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

News February 8, 2025

49% கூடுதல் சொத்துக்களை வாங்கி குவித்தவர் கைது

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பிட்டர் கண்ணன், கடந்த 15 ஆண்டுகளில் வருமானத்திற்கும் அதிகமாக 49% கூடுதல் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தை மதிப்பில், 4 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்துக்களை வாங்கியுள்ளதாக அவர் மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிவு செய்து, கணக்கில் வராத 2.16 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

News February 8, 2025

மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

கீழ்அம்பி பகுதியை சேர்ந்த பிரியா (20), சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர், கோகுல் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கோகுலுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் கடந்த 5ஆம் தேதி தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!