India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தளங்களை இங்கு காணலாம். அறிஞர் அண்ணா இல்லம்
ஏகாம்பரேஸ்வரர் கோயில்
கைலாசநாதர் கோயில்
குன்றத்தூர் முருகன் கோயில்
காஞ்சிபுரம் ஜமா மஸ்ஜித்
வல்லக்கோட்டை முருகன் கோயில்
உத்திரமேரூர் வைகுந்த பெருமாள் கோயில். காஞ்சியில் உள்ள சுற்றுலாத் தளங்களை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க. காஞ்சியில் பேமஸ்னு நினைக்கிற இடங்களை கமெண்டில் சொல்லுங்க!
காஞ்சிபுரம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் ஹிரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்கள் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அக்கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த மதன்ராஜ் என்பருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனை, மதன்ராஜ் கொலை செய்ய ரூ.15 லட்சம் கூலி படைக்கு கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சாய் மனோன்மணி திருமண மண்டபம், மாங்காடு பகுதிக்கு K.K.நகர் சமுதாய நலக்கூடத்திலும், குன்றத்தூருக்கு துண்டல்கழனி JC மஹாலிலும், திருப்பெரும்புதூருக்கு சந்தவேலூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகிலும், வாலாஜாபாத் பகுதிக்கு ஏனாத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் போலீசார் இன்று (ஆகஸ்ட் 19) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும். பகிரவும்!
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதனை உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
காஞ்சிபுரத்தில் சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்’ திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தால், காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு 2 செண்டு நிலம் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள <<17451635>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. ஷேர் பண்ணுங்க.
இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 10,277 காலியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் மட்டும் 894 பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்கள் நாளை மறுநாளைக்குள் (ஆகஸ்ட் 21) <
Sorry, no posts matched your criteria.