Kanchipuram

News February 15, 2025

நாளை துாப்புல் பரகால மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை

image

காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் உள்ள துாப்புல் பரகால மடத்தில், லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு என தனி சன்னதி உள்ளது. இங்கு நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை பரகால மடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு நாளை காலை 8.30 முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 முதல் 7.00 மணி வரை நடக்கிறது என துாப்புல் பரகாலமடம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 15, 2025

ரூ.100 க்கு விற்பனையான ரோஜா பூ

image

காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்திற்கு, ஓசூரில் இருந்து பெங்களூரூ ரோஜா வகைகளான தாஜ்மஹால், ஒயிட், எல்லோ, கிராண்ட் காலா, அவலான்ஜி போன்ற பலவகை ரோஜா விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம், காஞ்சிபுரம் பூக்கடைகளில், 20 ரோஜா பூக்கள் அடங்கிய ஒரு கட்டு ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கட்டு ரோஜா ரூ.800க்கு விற்கப்பட்டது. சாலையோர பூ வியாபாரிகள், ஒரு ரோஜாவை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

News February 15, 2025

பெட்டிகடையில் 9 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

ஸ்ரீபெரும்புதுார், பால்நல்லுார் கிராமத்தில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, காஞ்சிபுரம் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வல்லம் – வடகால் சிப்காட் சாலையில், பால்லுார் சந்திப்பில் உள்ள பெட்டி கடையில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு 15,000 ரூபாய் மதிப்புள்ள 9 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கலா, 44, என்பவரை கைது செய்தனர்..

News February 15, 2025

பாதாள சாக்கடையில் அடைப்பு, பொதுமக்கள் அவதி

image

காஞ்சிபுரம் பெருமாள் தெரு வழியாக மீன் மார்க்கெட் சாலையில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்து காணப்படும் இச்சாலையில், மீன் மார்க்கெட் எதிரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ‛மேன்ஹோல்’ வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது

News February 15, 2025

காஞ்சியில் ராஜாஜி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் துவக்கம்

image

கடந்த மாதம் 12ஆம் தேதி ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் கட்டிடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து வர்ணம் தீட்டுதல், உட்புறத்தில் தடுப்பு கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சமீபத்தில் முடிந்தது. அதனையொட்டி காய்கறி, மளிகை உள்ளிட்ட வியாபாரத்தை நேற்று வியாபாரிகள் தொடங்கினர். இந்நிகழ்வில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர் பங்கேற்றார்

News February 15, 2025

பட்டு தொழில் நலிவு: நெசவாளர்கள் புலம்பல்

image

இந்தியாவின் ஜவுளித்துறையில், குறிப்பிட்ட பங்கு வகிக்கும் இடமாக காஞ்சிபுரம் உள்ளது. இன்றைக்கும், நெசவு தொழிலை நம்பி இங்கு பிழைத்து வருகின்றனர். கூட்டுறவு கைத்தறி பட்டு சங்கங்கள் வாயிலாக ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல், விற்பனை நடக்கிறது. இந்நிலையில் பட்டு இழையால் நெய்யப்படாத பேன்சி ரக சேலைகள் அதிகளவில் இங்கு விற்பனை செய்யப்படுவதால், பட்டு தொழில் நலிவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது

News February 15, 2025

சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட குன்றத்தூர்

image

ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரிலும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும், தாருகாசுரனை திருப்போரூரிலும் சம்ஹாரம் செய்தார் முருகன். திருப்போரூரில் சம்ஹாரம் செய்து திருத்தணி செல்லும் வழியில் குமரன் அமர்ந்த மலைதான் குன்றத்தூர் மலை. சிவன், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்த தலமும் இதுதான். முருகன் வழிபட்ட ஈசன் ‘கந்தழீஸ்வரர்’ என்ற திருநாமத்தோடு குன்றத்தூர் மலையடிவாரத்தில் அருள்பாலிக்கிறார்.

News February 15, 2025

காஞ்சிபுரத்திற்கும் மெட்ரோ.. வெளியான மகிழ்ச்சி தகவல்

image

காஞ்சிபுரம் வரை மெட்ரோ இயக்க வேண்டும் என காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பரந்தூர் வரை நீட்டிக்கப்பட உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, பொன்னேரிக்கரை வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், காஞ்சிபுரத்திற்கு மெட்ரோ வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளது. அவ்வாறு செய்தால் அனைத்து பயணிகளுக்கும் வரப்பிரசாதனமாக இருக்கும். பயணிகளுக்கு பயண நேரம் குறையும்.

News February 15, 2025

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரத்தில் இன்று (பிப்.15) மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஓரிக்கை, சின்ன காஞ்சிபுரம், தேனம்பாக்கம், ஐயன்பேட்டை, முத்தியால் பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, செவிலிமேடு, சங்கூசாபேட்டை, வல்லம், ஸ்ரீபெரும்புதூர், பால்நல்லூர், சிறுபாகல், ஏகனாம்பேட்டை, நெற்குன்றம், புத்தகரம், வாலாஜாபாத், பழையசீவரம், சித்தாலப்பாக்கத்தில் மின்தடை ஏற்படும்.

News February 14, 2025

அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

image

மதுரவாயல் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி. கலைச்செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக, சோதனை நடந்து வருகிறது. யாரும் வீட்டில் இல்லாத நிலையில் அவரது உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!