Kanchipuram

News February 28, 2025

காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையுமா?

image

காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையும் என அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் பட்டு தொழிலில் வருவாய் ஈட்டியும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கைத்தறி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் உள்ள ஜவுளித்துறை அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், ஏற்றுமதி மையம் செய்வதற்கான இடம் தேர்வு பற்றி தகவல் இல்லை என்றனர். 

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் <>சம்பளம் வழங்கப்படும்.<<>> ஷேர் பண்ணுங்க

News February 28, 2025

கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை: 3 பேர் கைது

image

ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு கருக்குப்பேட்டையில் உள்ள கடையில் பொருட்களை வாங்கி கெண்டு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, 4 இளைஞர்கள் சாந்தியை கேலி கிண்டல் செய்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் நேற்று (பிப்.27) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 28, 2025

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்

image

ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.

News February 27, 2025

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: நால்வர் கைது

image

பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில், திருச்சி, சாயலூரைச் சோ்ந்த 22 வயது இளம் பெண் கடந்த 6 மாதங்களாக பணிபுரிகிறாா். இவா் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றபோது 4 போ் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அப்பெண்ணின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மகளிர் போலீசார் ரெங்கா, சந்திரசேகா், சக்தி என்ற சதீஷ்குமாரை கைது செய்தனர். வெங்கடேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

News February 27, 2025

கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 இளைஞர்கள் கைது

image

வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில், இரவு நேரத்தில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கா, சதீஷ்குமார், சந்திரசேகர் ஆகிய 3 இளைஞர்கள் வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு 3 பேரையும் இன்று (பிப்.27) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

100 CCTV கேமராக்களை ஆய்வு செய்து கைது

image

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரையில் உள்ள 100க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து பல்லாவரம் பம்மல் பகுதியைச் சதாம் உசேன், சுரேஷ், பரிபாய்தீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 26, 2025

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது

image

காஞ்சிபுரம் அடுத்த ஊத்துக்காடு கிராமத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி அருகே கருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (23), சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய்(21) ஆகிய இருவரும் நேற்று தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சாவை விற்பனை செய்து வந்த நிலையில், போலீசார் ரோந்து பணியின் போது அவர்களை கைது செய்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

News February 25, 2025

POST OFFICE JOB- விண்ணப்பித்தால் போதும் சூப்பர் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!