India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த லிங்கை <
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 10) டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்து மூட வேண்டும். தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும். மீறி விற்பனை செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில், கடந்த மாதம் 11ஆம் தேதி ரவுடி வசூல் ராஜா (34) மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில், பரத் (20) மற்றும் சிவா (19) ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
நமது பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்ர குப்தருக்கு காஞ்சிபுரம் நகரில் தனி கோவில் உள்ளது. இந்த சித்ரகுப்தரை வணங்குவதால் கேது தோஷம், கல்வி தோஷம், புத்திர தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். மேலும், ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகளை இவர் எழுதுகிறார். எனவே, அன்றைய தினம் இக்கோவிலில் விரதம் இருந்து வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோபேஸ் தொழிற்பூங்காவில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னனு உற்பத்தி சேவை திட்டத்தை நிறுவுவதற்கு ரூ.1000 கோடி முதலீடு செய்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த திட்டத்தால் புதிதாக 5000 பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் என கூறப்படுகிறது. SHARE TO FRIENDS
பரந்தூர் விமானநிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பி.கே.எம்.போனிக்ஸ் ஷிட்டு ரியோ கராத்தே அசோசியேசன் தலைவர் முரளியிடம், கடந்த 4 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று பல்வேறு தேசிய அளவிலான கராத்தேப்போட்டி மற்றும் மாநில அளவிலான டேக்வாண்டா மற்றும் சிலம்ப போட்டிகளில் தங்கம் வென்ற ஆற்காடு நாராயண சுவாமிப் பள்ளி மாணவி சரஸ்வதி & முசரவாக்கம் அரசுப்பள்ளி மாணவன் அறிவுநிதியை மாவட்ட எஸ்.பி. சண்முகம் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும் அதிமுகவை சேர்ந்த மேவலூர் குப்பம் ஊராட்சி மன்ற தலைவி அபிராமி மற்றும் அவரது கணவர் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம், மரக்காணத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்(25), இவர் ஒரகடம் அடுத்த, வாரணவாசி பகுதியில் வாடகைக்கு தங்கி, தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த 4ம் தேதி, தமிழ்செல்வன் அறையில் தூங்கி கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த டேனியல்நாத்(27), அறையில் நுழைந்து தமிழ்செல்வனின் மொபைல்போனை திருடி சென்றார். இதற்கு தமிழ்ச்செல்வன் புகாரளித்தபின், டேனியல்நாத் என்பவரை ஒரகடம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.