Kanchipuram

News March 2, 2025

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம்

image

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி, 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு பிரம்மோற்சவம், நாளை (மார்ச்.3) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை மறுதினம், சந்திரபிரபை, 5ம் தேதி யானை வாகனம், 10ம் தேதி குதிரை வாகனம் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 2, 2025

மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் இடங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, மாங்காடு முத்துக்குமரன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, படப்பை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி ஆகிய எட்டு தேர்வு மையங்களில் கணினி வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளது.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

காஞ்சிபுரத்தில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 53 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

விவசாய கிணற்றில் தொழிற்சாலை காவலாளி மரணம்

image

உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (54). தனியார் தொழிற்சாலை காவலாளியான இவர், நேற்று முன்தினம் (பிப்.28) இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று (மார்.1) காலை அதே பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையா? தற்கொலையா? என்று விசாரிக்கின்றனர்.

News March 2, 2025

புதிய தயார் நிலை தொழில் கூடம்: நிறைய வேலைவாய்ப்பு

image

வடகால் சிப்காட் பகுதியில் பொது மற்றும் கூட்டு முயற்சியில் 1.30 லட்சம் சதுர அடியில் தயார் நிலை தொழில் கூடம் அமைக்கப்பட உள்ளது. டெண்டருக்கு காசா கிராண்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளது. இடம் வழங்கியதற்காகவும், ஆண்டு குத்தகை மற்றும் மொத்த வருவாயில் 1 பங்கு என 3 வகையில் வருவாய் கிடைக்கும். குறைந்த முதலீடு என்பதால் சிறு நிறுவனங்கள் நிறைய முதலீடு செய்யும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

News March 1, 2025

ராணுவ வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்த காஞ்சி ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (01.03.2025) நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறை கேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

News March 1, 2025

கண் நோய்களை குணமாக்கும் எம்பார் கோவில்

image

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் (எம்பார் கோவில்) உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி எம்பார் சுவாமியை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்று அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இங்கு வந்து தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஷேர் பண்ணுங்க.

News March 1, 2025

காஞ்சிபுரத்தில் வரி விதிப்பில் முறைகேடு?

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என ஏழு வகையான வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. மாநகராட்சி முழுதும் உள்ள 51 வார்டுகளிலும், 52,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலிக்கும் பில் கலெக்டர்கள், கட்டடங்கள் மீதான ஆய்வு பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை எனவும், ‘கமிஷன்’ பெற்றுக்கொண்டு இஷ்டம் போல் வரி விதிப்பு செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

News March 1, 2025

பார்மசி படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400- ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 1, 2025

கல்லூரி மாணவனை தாக்கி பணம் பறித்த கும்பல்

image

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆகாஷ் குப்தா (25). ஒரகடத்தில் வாடகைக்கு குடியிருந்து, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்.27ஆம் தேதி ஒரகடம் மேம்பாலம் அருகே நடத்து சென்ற போது அவ்வழியாக வந்த கார், ஆகாஷ் குப்தாவை வழிமறித்தது. கத்தி முனையில் அவரை தாக்கி ரூ.10,000 பணம், நகையை மர்ம கும்பல் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

error: Content is protected !!