India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், திருக்காலிமேடு செல்லும் வழியில் உள்ள அல்லாபாத் ஏரி சீரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் ரவிமீனா கூறுகையில், ”அல்லாபாத் ஏரிக்குள் இருக்கும் அனைத்து மான்களையும் நாங்கள் பிடிக்க உள்ளோம். அவற்றை பாதுகாப்பாக பிடித்து, ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் போன்ற இடங்களில் உள்ள காப்பு காடுகளில் விடுவோம்” எனத் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் கலெக்டரின் நேர்முக உதவியாளராக கோபி (59) பணிபுரிந்து வந்தார். இவரை, நேர்முக உதவியாளர் பணியில் இருந்து கலெக்டர் அதிரடியாக விடுவித்தார். அந்த பணியிடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கவில்லை. கலெக்டரின் செயலுக்கு முறையான விளக்கம் அளித்து, மீண்டும் மாநில ஊரக வளர்ச்சி துறையில் இருந்து பணியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் உள்ள 274 ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ஊராட்சி தலைவர்கள் தலைமையில் நேற்று (மார்.29) கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மழைநீரை சேகரித்தல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற விஷயங்கள், முக்கிய விவாத பொருளாக கிராம சபையில் பேசப்பட்டன. இதுசம்பந்தமாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இந்த ஆண்டு பட்ஜெட்டில், ரூ.15 கோடியில் பாதாள சாக்கடை வழித்தடம். ஓ.பி.குளம், வெள்ளை குளத்தை சீரமைத்து ரூ.3 கோடியில் நடைபயிற்சி. ஓரிக்கை, செவிலிமேடு பகுதிகளில் ரூ.400 கோடிக்கு பாதாள சாக்கடை திட்டம். தூய்மை பணியாளர்களுக்கு காலை டிபன் மற்றும் இரவில் பணியாற்றுபவர்களுக்கு டீ. ரூ.75 லட்சத்தில் புதிதாக நாய் கருத்தடை சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கடந்த ஆண்டைவிட கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிக்குட்பட்டுள்ளனர். நேற்றைய வெப்பநிலையைக் காட்டிலும் இன்று இரண்டு டிகிரி கூடுதலாக அதாவது 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. குறிப்பாக 12 மணியிலிருந்து 3:00 மணி வரையும் வெளியே வராமல் வீட்டிலேயே தற்காத்துக் கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் இன்று (29.03.2025) ரூ.22.61 கோடி மதிப்பீட்டில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்/நீதிபதிகள் குடியிருப்பு கட்டும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (காஞ்சிபுரம் மாவட்ட போர்ட்ஃபோலியோ நீதிபதி) மாண்புமிகு திரு.நீதியரசர் கே.முரளிசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உடன் இருந்தனர்
காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு, மே மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு காரணங்களால் 32 பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 32 காலியாக இருக்கும் இடங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டியுள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.