Kanchipuram

News April 28, 2025

வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News April 28, 2025

பைக் மீது கார் மோதி பெண் உயிரிழப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தேவகி (45), அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருடன் நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) இரவு பைக்கில் கோவிந்தவாடி சந்தைமேட்டில் இருந்து காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, கார் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில், தேவகி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

News April 28, 2025

காஞ்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை  நடைபெற உள்ளது. ஏப்ரல் மாதத்தின் கடைசி வாராந்திர கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்  கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

காஞ்சிபுரம் ஊராட்சிகளுக்கு பறந்த கலெக்டரின் உத்தரவு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மிக முக்கியமாக மக்கள் பார்வையிட ஊராட்சி தகவல் பலகையில் வரவு செலவு எழுதிடவும், வரவு செலவு கணக்கு குறித்து பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News April 27, 2025

காஞ்சிபுரம் சிவன் கோயில்கள் பட்டியல்

image

▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில்
▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில்
▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில்
▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில்
▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில்
▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில்
▶திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில்
▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில்

News April 27, 2025

கணவன், மனைவி சண்டையா?

image

காஞ்சிபுரம், மாகரல் பகுதியில் அமைந்துள்ள மாகறலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க

News April 27, 2025

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News April 26, 2025

காஞ்சிபுரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 26, 2025

எதிரிகள் தொல்லை நீக்கும் ஜய அனுமன்

image

காஞ்சிபுரம் மாவட்டம் மகாரண்யம் பகுதியில் கன்யாகுமரி ஜய அனுமன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலித்து வரும் ஜய அனுமனுக்கு அபிஷேகம் செய்து வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், திருமணம் தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்!

error: Content is protected !!