India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று(ஏப்.8) ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியை, 5 பகுதிகளாக பிரித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட வாக்கு பெட்டியுடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடு வீடாக சென்று முதியோர் மற்றும் ஊனமுற்றவர்களிடம் தபால் வாக்கு பதிவில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.8) முதல் தபால் வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெறுகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட 1039 பேர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 612 பேர் என, மொத்தம் 1651 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது வாக்குகளை பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மணணூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர்(36), சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் மீது 12 வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம்(ஏப்.5), தாய் ரெஜினாவை மது போதையில் தாக்கியுள்ளார். இது குறித்து பாலசந்தரின் சகோதரர் மோகனரங்கனுக்கு தெரிய வரவே கட்டையால் தாக்கியதில் பாலசந்தர் உயிரிழந்தார். போலீசார் மோகனை கைது செய்தனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள <
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் அறக்கட்டளை கீழ் செயல்படும் பள்ளி உள்ளது. சமீபத்தில் இப்பள்ளியில் ரவுடிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இது குறித்து விசாரித்த போலீசார், சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வழக்கும் பதிந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ரவுடிகளுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட சிறப்பு படை களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி காஞ்புரம் மாவட்டம் வாலாஜாபாத் ரவுண்டானா அருகே, ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர் சகுந்தலா தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று(ஏப்.5) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த நகைக்கடை வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, பணத்திற்கும் கணக்கிற்கு முரண்பாடு ஏற்பட்டதாக ரூ.25 லட்சத்து 6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
குன்றத்தூர் அருகே மாங்காடு பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த புஜகர் (38) மற்றும் சோனியா(30) வசித்து வரும் நிலையில் அதே பகுதியில் உள்ள மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பர்மனுக்கு (40) சோனியா பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது.இதற்கு இடையூறாக இருந்த கணவன் புஜகரை கொலை செய்து விட்டு நாடகமாடி வந்த நிலையில் போலீஸ் விசாரணையில் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்திரமேரூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பல்லவர் கால துர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. இதில் ஆண்டுக்கு ஒரு முறை மூலவர் துர்க்கை அம்மன் மீது முழுமையாக சூரிய ஒளி கதிர் பிரகாசமாக படும் அரிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 17 முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.