India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் (எம்பார் கோவில்) உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி எம்பார் சுவாமியை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்று அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இங்கு வந்து தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என ஏழு வகையான வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. மாநகராட்சி முழுதும் உள்ள 51 வார்டுகளிலும், 52,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலிக்கும் பில் கலெக்டர்கள், கட்டடங்கள் மீதான ஆய்வு பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை எனவும், ‘கமிஷன்’ பெற்றுக்கொண்டு இஷ்டம் போல் வரி விதிப்பு செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400- ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆகாஷ் குப்தா (25). ஒரகடத்தில் வாடகைக்கு குடியிருந்து, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்.27ஆம் தேதி ஒரகடம் மேம்பாலம் அருகே நடத்து சென்ற போது அவ்வழியாக வந்த கார், ஆகாஷ் குப்தாவை வழிமறித்தது. கத்தி முனையில் அவரை தாக்கி ரூ.10,000 பணம், நகையை மர்ம கும்பல் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையும் என அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் பட்டு தொழிலில் வருவாய் ஈட்டியும் ஏற்றுமதி மையம் அமைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கைத்தறி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னையில் உள்ள ஜவுளித்துறை அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், ஏற்றுமதி மையம் செய்வதற்கான இடம் தேர்வு பற்றி தகவல் இல்லை என்றனர்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் <
ஏகனாம்பேட்டை பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு கருக்குப்பேட்டையில் உள்ள கடையில் பொருட்களை வாங்கி கெண்டு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, 4 இளைஞர்கள் சாந்தியை கேலி கிண்டல் செய்து கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் 3 பேரை போலீசார் நேற்று (பிப்.27) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.
பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாா் சொந்தமான தொழிற்சாலையில், திருச்சி, சாயலூரைச் சோ்ந்த 22 வயது இளம் பெண் கடந்த 6 மாதங்களாக பணிபுரிகிறாா். இவா் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்றபோது 4 போ் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர். அப்பெண்ணின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மகளிர் போலீசார் ரெங்கா, சந்திரசேகா், சக்தி என்ற சதீஷ்குமாரை கைது செய்தனர். வெங்கடேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
வாலாஜாபாத் அடுத்த கருக்குப்பேட்டை பகுதியில், இரவு நேரத்தில் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணை கோனேரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கா, சதீஷ்குமார், சந்திரசேகர் ஆகிய 3 இளைஞர்கள் வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு 3 பேரையும் இன்று (பிப்.27) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sorry, no posts matched your criteria.