India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
வாலாஜாபாத்தில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (மார்.11) வண்டலுார் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரகடம் மேம்பாலத்தை கடந்தபோது அதிக பாரம் ஏற்றி வந்ததால் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை நடுவே விழுந்தது. அஷிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோவில்களை தற்போது பார்க்கலாம். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம்: திருக்காழிமேடு பகுதியில் பிரபல ரவுடி வசூல் ராஜ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் கொலை செய்தது யார் என துப்பு துலக்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த காட்சியில் தென்பட்ட ஒருவர் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவர் என்றும், மற்றோருவர் 22 வயது இளைஞர் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில் பிரபல ரவுடியான வசூல்ராஜா மீது வெடிகுண்டு வீசி வெட்டிக்கொன்று விட்டு 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலில் ஈடுப்பட்டுள்ளது. வசூல்ராஜா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பழிக்குப்ழியாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும். ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை<
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றது. கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில்,கோவிலின் நான்காம் பிரகாரத்தில், சீரமைப்பு பணிக்காக, கோவில் ஊழியர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, மண்ணுக்கு அடியில் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. மேலும், ஆழப்படுத்தி பார்க்கும்போது, அது முருகன் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிலையை கோயிலில் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்ற விரைவு பேருந்து ஒன்று, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, திண்டிவனம் செல்லும் முதியவர் ஒருவர், இப்பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்து அங்கு நிற்காது எனக் கூறி இடித்து தள்ளி உள்ளார்.இச்சம்பவத்தால் அங்குள்ளவர்கள் நடத்துநரை தட்டிக் கேட்டனர்.
காஞ்சிபுரம், திரிசூலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில். இங்கு இறகு இல்லாத சபவேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கார்த்திகை தீபம், சிவராத்திரி, பங்குனி உத்தரத்தன்று திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பு. இங்கு வழிபட்டால் கல்வி மற்றும் வேலையில் அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்தினம் அணிவித்து அபிஷேகங்கள் செய்கிறார்கள். சேர் பண்ணுங்க.
மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகுமாரன், வித்தியா தம்பதி. இவர்களது இரண்டரை வயது குழந்தை ஆருத்ரா. நேற்று மாலை வித்தியா துணிகளை காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்று துணியை காய வைத்துள்ளார். அப்போது குழந்தை ஆருத்ரா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.