India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
படப்பை அருகே செரப்பனஞ்சேரி பகுதியில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் மீனா வ/17. இவர் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மீனா வீட்டின் உள் அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவியின் தற்கொலை குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் பகுதியில் மதுவிற்ற பெருமாள்(24) என்பவரை பிடித்த போலீசார், ரூ.26 ஆயிரம் மற்றும் 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மணிமங்கலம் தலைமை காவலர் சங்கர், 2ம் நிலை காவலர்கள் ஆனந்தராஜ், கணேசன்சிங் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
வரதராஜ பெருமாள் கோயில், திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 31ஆவது திவ்ய தேசமாகும். நூறுகால் மண்டபத்தின் மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் உற்சம். திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் இத்தலத்தை போற்றியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி சிறப்பு திட்டமானது தற்போது வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் இடுபொருட்களை வேளாண்துறை மூலம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இன்று(24.04.2024) நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று(ஏப்.24) ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்காரகுளம் பகுதியில் பாலாற்றின் கரையில் உள்ள 15 அடி ஆழம் கொண்ட நீராவி நடபாவி ஆழ் கிணற்றில் நேற்று(ஏப்.23) சித்திரை மாதம் பௌர்ணமியை ஒட்டி, ஒரு நாள் காஞ்சி வரதராஜர் பெருமாள் பூதேவி ஶ்ரீதேவி உடன் நடபாவி கிணற்றில் எழுந்தருளி திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐயங்கார் குளம் பகுதியில் அமைந்துள்ள நடவாய் கிணறு ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் நடவாய் கிணறை காண ஏராளமான பொதுமக்கள் குவித்து வருகின்றனர். இக்கிணற்றில் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சென்று காணமுடியும் என்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டு களித்து வருகின்றனர்.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் இன்று முதல் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 1889 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பாஜக சார்பில் மாநகர மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம் ஏற்பாட்டில் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தீர்க்க முக்கிய வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலை, தெரு பகுதியில் குடிநீர் மற்றும் மோர் வழங்கி பொதுமக்களின் தாகத்தை தீர்த்தனர்.
Sorry, no posts matched your criteria.