India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக வரும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கணினி வழியில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 6ஆம் தேதிக்கான தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புலிவனம் பகுதியில், புகழ்பெற்ற வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பலிக்கிறார். பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் பெற, நவக்கிரக தோஷம், நாக தோஷம் நீங்க, பிணி, தொழில் விருத்தி பெற, ராஜ்யோகம் பெற வரமளிக்கும் தலமாக உள்ளது. மேலும், இந்த வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வில்வம், வஸ்திரம் சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி, 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு பிரம்மோற்சவம், நாளை (மார்ச்.3) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை மறுதினம், சந்திரபிரபை, 5ம் தேதி யானை வாகனம், 10ம் தேதி குதிரை வாகனம் உற்சவம் உள்ளிட்டவை நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உத்திரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, மாங்காடு முத்துக்குமரன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, படப்பை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி ஆகிய எட்டு தேர்வு மையங்களில் கணினி வழியில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு நடைபெற உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 53 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <
உத்திரமேரூர் அடுத்த பருத்திக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (54). தனியார் தொழிற்சாலை காவலாளியான இவர், நேற்று முன்தினம் (பிப்.28) இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று (மார்.1) காலை அதே பகுதியில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையா? தற்கொலையா? என்று விசாரிக்கின்றனர்.
வடகால் சிப்காட் பகுதியில் பொது மற்றும் கூட்டு முயற்சியில் 1.30 லட்சம் சதுர அடியில் தயார் நிலை தொழில் கூடம் அமைக்கப்பட உள்ளது. டெண்டருக்கு காசா கிராண்ட் நிறுவனம் தேர்வாகியுள்ளது. இடம் வழங்கியதற்காகவும், ஆண்டு குத்தகை மற்றும் மொத்த வருவாயில் 1 பங்கு என 3 வகையில் வருவாய் கிடைக்கும். குறைந்த முதலீடு என்பதால் சிறு நிறுவனங்கள் நிறைய முதலீடு செய்யும். ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (01.03.2025) நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சிறப்பு குறை கேட்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியில் பிரசித்திபெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் (எம்பார் கோவில்) உள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என கூறப்படுகிறது. நெய் தீபம் ஏற்றி எம்பார் சுவாமியை வழிபட்டால் கண் நோய்கள் குணமாகும் என்று அக்கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், இங்கு வந்து தரிசித்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என ஏழு வகையான வரி இனங்கள் வசூலிக்கப்படுகின்றன. மாநகராட்சி முழுதும் உள்ள 51 வார்டுகளிலும், 52,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. வரி வசூலிக்கும் பில் கலெக்டர்கள், கட்டடங்கள் மீதான ஆய்வு பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை எனவும், ‘கமிஷன்’ பெற்றுக்கொண்டு இஷ்டம் போல் வரி விதிப்பு செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.