Kanchipuram

News May 29, 2024

காஞ்சி: நடிகர் விஜயின் தந்தை சாமி தரிசனம்

image

பிரபல நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபனா ஆகியோர் இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் ஏராளமானோர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

News May 29, 2024

காஞ்சிபுரம் இஸ்கான் கோயில் சிறப்பு!

image

கிருஷ்ணகிரியில் உள்ள இஸ்கான் கோயில், அல்லது ஸ்ரீ ராதா கிருஷ்ண மந்திர் என்னும் கோயில், இஸ்கான் நிறுவனர் ஏ.சி. பக்திவேந்தாந்த சுவாமி பிரபுபாதாவால் நிறுவப்பட்டது. இவர் 1972 இல் சொற்பொழிவு ஆற்றி, சென்னையின் பல இடங்களில் இஸ்கான் சபை கூட்டத்தையும் நிகழ்த்தினார். பின் 2002இல் இக்கோயில் 45,000 ச.அடியில் கட்டப்பட்டது. இதனுள் கோயில் மண்டபம், நிகழ்ச்சி அரங்கம், பிரசாத மண்டபம் போன்றவை உள்ளன.

News May 29, 2024

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

image

காஞ்சி வரதராஜ சுவாமி கோயிலில் வைகாசித் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாது அனந்தசரஸ் திருக்குளத்தில் புனித நீராடினர். இதையொட்டி, பிராணதார்த்தி ஹரிவரதர் எனும் தீர்த்தபேரர் சிறிய பல்லக்கில் கோயில் வளாகத்தில், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு எழுந்தருளினார். கோயில் பட்டாச்சாரியார் தீர்த்தபேரருடன் குளத்தில்
நீராடினார்.

News May 28, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் (National Overseas Scholarship Scheme (NOS) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

News May 28, 2024

குதிரை வாகன பெருமாளுக்கு பரிவட்டம் விழா

image

காஞ்சிபுரம் மாநகராட்சியில் டி.கே.நம்பி தெருவில் உள்ள ஸ்ரீதிருமலை ஆழ்வார் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் வந்த பெருமாளுக்கு பூரண கும்ப பரிவட்டம் விழா நடைபெற்றது. இதில் மண்டபத்தில் அருளிய பெருமாளுக்கு ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் தரிசனம் செய்து பரிவர்த்தத்தை கண்டு களித்தார்கள். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். 

News May 27, 2024

டென்சிங்க் நார்கே தேசிய சாகச விருதுக்கு அழைப்பு

image

நீர், நிலம், மலை போன்ற சாகசத் துறைகளில் (Adventure Sports) இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும், டென்சிங்க் நார்கே தேசிய சாகச விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஜூன் 14 வரை http://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் படி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

News May 27, 2024

காஞ்சி கலெக்டர் அறிவிப்பு 

image

தமிழ்நாடு அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட், நிறுவனத்தின் (OMCL) வழியாக முதன் முறையாக ஜெர்மன், ஜப்பான் போன்ற நாடுகளில் பணிபுரிய இலவச வெளிநாட்டு மொழிப் பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. OMCL இணையதளமான www.omcmanpower.tn.gov.in-இல் விருப்பமுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.

News May 27, 2024

பெண்கள் அறையை எட்டிப் பார்த்த இளைஞன் பலி

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் பணி பெண்கள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அறையை பரசுராம் (28) என்ற இளைஞன் நேற்று எட்டி பார்த்துள்ளார். இதையறிந்த பெண்கள் அலறியுள்ளனர் . சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அடித்ததில் பரசுராம் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில், அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வாரணவாசி பகுதியைச் சேர்ந்த 7 இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News May 25, 2024

ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு

image

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்து 1500 போலீஸார் ஈடுபடுகின்றனர்.

News May 25, 2024

ஏரியில் குளிக்க சென்ற இளைஞன் பலி

image

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று குளிக்க சென்ற வி.ஆர். பி. சத்திரம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞர் நீரில் மூழ்கி வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி  இன்று மதியம் சூரியாவி உடலை மிட்டனர். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

error: Content is protected !!