India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் பல் மருத்துவத்தில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (Assistant Surgeon -Dental) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.17. இதற்கு BDS முடித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இங்க <
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் மார்.8 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூரில் பழவேரி,வாலாஜாபாத்தில் காவந்தண்டலம், திருபெரும்புதூர் வட்டத்தில் செங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் காவனூர் ஆகிய கிராமங்களில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளதால் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்களை வழங்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <
காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா நிகர்நிலை பல்கலை சார்பில், ‘சங்கரா மாரத்தான் – 2025’ போட்டி வரும் 9ஆம் தேதி காலை 6 மணிக்கு பல்கலை வளாகத்தில் தொடங்க உள்ளது உள்ளது. முதல் பரிசாக ரூ.10,000, 2ஆவது பரிசாக ரூ.5,000, 3ஆவது பரிசாக ரூ.3,000 ரொக்கமாகவும் மற்றும் பூமா காலணிகள் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 99769 99557 என்ற எண்ணில் அழைக்கலாம்.
செங்கழு நீரோடை வீதியில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை நேற்று (மார்.3) மூடப்பட்டது. பிரச்னைக்குரிய கடையாகவே செயல்பட்டு வந்ததால், இந்த கடை இருக்கும் இடம் அருகே செல்லவே பொதுமக்கள் தயங்கினர். கடையை இடமாற்றம் செய்ய, மாதந்தோறும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் பலமுறை பேசப்பட்டு வந்தது. அந்த டாஸ்மாக் கடையை மூடி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
காஞ்சிபுரம் காமாட்சி கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள் கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், சரக ஆய்வர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று, திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன. இதில், 76 லட்சத்து 4,234 ரூபாய் ரொக்கமும், 385 கிராம் தங்கமும், 645 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.
ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தினமும் காலை 7 மணி- இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும். ஷேர் பண்ணுங்க.
விவசாயிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு, வேளாண் அடுக்ககம் திட்டத்தின்கீழ் விவசாயிகளின் சுய விபரங்களை பதிவேற்றம் செய்யும் பணியை வேளாண் துறை துவக்கி உள்ளது. இதில், வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி விபரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். விண்ணப்பிக்க தவறிய விவசாயிகள், வேளாண் துறையினர் மற்றும் பொது சேவை மையங்களில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (03.03.2025) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டை வேண்டி சத்தியா என்பவர் மனு அளித்துள்ளார். மனுவிற்கு உடனடி நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கினார். அவரின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரத்தில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 53 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். இன்றுக்குள் (மார்.3) இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.