India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பி.ஆர்.பாலகிருஷ்ணன்(ஐ.டி. – ஓய்வு) தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ அல்லது பொது மக்களோ தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 93452 98218 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவம் மே 20ம் தேதி தொடங்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் இன்று(ஏப்.2) அறிவித்துள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் 22ம் தேதி காலையும், திருத்தேர் உற்சவம் 26ம் தேதியும் நடைபெறுகிறது.
ஶ்ரீபெரும்புதூர் அருகே சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (65). இவர் தனது மனைவி, பேரனுடன் தனது இருசக்கர வாகனத்தில் சிவன்தாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது காஞ்சிபுரம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய மாஜி அமைச்சர் வளர்மதி தமிழ்நாடு அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகை, பாதி டாஸ்மாக்கிற்கும், மீதி சைடு டிஷ்ஷுக்கும் தான் போகிறது”என இன்று விமர்சித்துள்ளார்.
விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், காஞ்சிபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்பட்டுச்செல்லும் அரசு பேருந்துகளில் தற்போது, ‘ஆன்லைன்’ வாயிலாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இப்பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர், www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்புதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆதரித்து திறந்தவெளி வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த தகவலை கட்சி தலைமை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் மற்றும் அரசியல் கட்சியினா் 5 போ் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா். க.செல்வம்-திமுக(உதயசூரியன்), பெரும்பாக்கம் இ.ராஜசேகா்-அதிமுக (இரட்டை இலை), வெ.ஜோதி வெங்கடேசன்-பாமக (மாம்பழம்), வி.சந்தோஷ்குமாா்-நாம் தமிழா் (மைக்), எஸ்.இளையராஜா-பகுஜன் சமாஜ் (யானை) மேற்கண்ட இவர்கள் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்
மதுராந்தகம் தாலுகா பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் தாவூத்(42). இவர் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த
மேவளூர்குப்பம் பகுதியில் வசித்துக் கொண்டு வெல்கம் டிரான்ஸ்போர்ட் நடத்தி வந்தார்.இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் தாவூத் மனைவியான நூர்ஜஹானுக்கு வீடியோ கால் மூலம் போன் செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அம்பத்தூர் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 13 வேட்பாளர் தேர்வு செய்தனர் அதில் 2 வேட்பாளர்கள் வாபஸ் பெற்ற நிலையில் தற்போது 11 வேட்பாளர்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு, அதில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் உடன் திமுக, அதிமுக, பாமக, நாதக உள்ளிட்ட 5 பிரதான கட்சிகள் போட்டியிடுகிறது.
காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் கோவிலில் பிரபல சீரியல் நடிகை லட்சுமி வருகை தந்து இன்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பிரபல சீரியல் நடிகைக்கு சிறப்பான வரவேற்பும் கோவில் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ஏராளமான குவிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
Sorry, no posts matched your criteria.