India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, காஞ்சிபுரம் பகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் வருட பிறப்பு ஒட்டி நேற்று இரவு அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு தங்கத் தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சியம்மன் லட்சுமி சரஸ்வதியுடன் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒரு முறை கோவிலில் இருந்து வெளியே வந்து தங்க தேர் பவனி காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கத்தேரே வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் ( IMFL) மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (Bar) FL1 , FL2, FL3, FL3A FL3AA மற்றும் FL11 ஆகியவை வரும் 21 ஆம் தேதி மற்றும் மே 1 ஆம் தேதி ஆகிய நாட்களில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பவானி. இவருக்கு மணிகண்டன் என்பருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் இதற்கு மோகன்ராஜ், இடையூறாக இருப்பதாக கூறி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மோகன்ராஜை கொலை செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக பவானி, மணிகண்டன் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்றத்தூர் பகுதியில் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை மேம்பாலம் அருகே ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் விசாரணையில் வெளிநாட்டிலிருந்து விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சேமிப்பு குடோனுக்கு கொண்டு செல்வது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணித்ததாக அறிவிப்பு வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நாகப்பட்டு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்ற மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பதாக அறிவித்து தமிழக அரசு எதிராக கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
இன்று (12.04.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சமத்துவ நாள் உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க. சங்கீதா, இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தொழில் நிறுவனங்கள், கடைகள், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், படப்பை அருகே கரசங்கால் பகுதியில் ஏப்ரல் 16ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.