India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பசுமை வழி வாக்கு சாவடி மையம் அமைக்க பள்ளி முழுவதும் வாழை மரம், தென்னங்குருத்து, பனை நுங்கு குருத்து, பழ வகைகளால் அலங்கரிக்கப்பட்டு வாக்கு சாவடி முழுவதும் பசுமையான நிறைந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. வாக்காளர்கள் பசுமை நிறைந்த வாக்குசாவடி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தனி தொகுதியில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியர் அலுவலகம் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் உடனடியாக பேசி தீர்வு காண வேண்டும் என காவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அறிவுரை வழங்கினார்.
2019 மக்களவைத் தேர்தலில், காஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம் வெற்றிபெற்று எம்.பியானார். இவர், மொத்தம் 6,84,004 (55.3%) வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். சுயேச்சை வேட்பாளரான தேவராஜன் 1,312 வாக்குகள் பெற்று கடைசி இடம் பிடித்தார். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! நம் ஓட்டு நமது குரல்!
கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம், 2009-ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 15-வது மக்களவைத் தேர்தலை காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும். இம்மக்களவைத் தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 17,32,946 ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் நேற்று(ஏப்.17) போலீசாரின் ரோந்து பணி மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. வாக்குப்பெட்டி வாகனங்களுடன் பாதுகாப்பும் அளிக்கும் வகையில் செல்ல ஏதுவாக, காவல்துறை வாகனங்களும் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சிவகாஞ்சி காவல் நிலையத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் 6 மணியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் 6 மணிக்கு மேல் தேர்தல் விதிகளை மீறும் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொள்ளுதல், பண பட்டுவாடா தடுத்தல் போன்ற விதிகளை மீறுபவர்களை ட்ரோன் மூலம் கண்டறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று ஆட்சியர் வளாகத்துக்குள் தேர்தல் போலீஸ் ரோந்து பணிக்கு மற்றும் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்ல வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்க காவல்துறை தயாரான நிலையில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்ல வாகனங்கள் அனைத்தும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட கரசங்கால் பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சிக்கு உட்பட்ட கரசங்கால் பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் டி ஆர் பாலு அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, ஏப்ரல்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி, வாக்குப்பதிவு அன்று வண்டலூர் பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக ஏப்ரல்.19 ஆம் தேதி வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.