India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, வரும் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதிக்கப்படும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
ஸ்ரீபெரும்புதுார், மேவலுார்குப்பத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் நேற்று (மார்.13) காலை ஆண் சடலம் ஒன்று மிதந்தது. போலீசார் விசாரணையில், இறந்தவர் பீகாரைச் சேர்ந்த புல்லட் மஞ்சி (27) என்பதும், குளக்கரை தெருவில் வாடகைக்கு தங்கி இருந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் (மார்.12) இரவு குளக்கரையில் அமர்ந்து மது அருந்தியபோது, போதையில் குளத்தில் தவறி விழுந்தது உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. வாலீஸ்வரர் கோயிலில் வழிபட்டால் குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல், காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற உலக தண்ணீர் தினமான 22.03.2025 அன்று நடைபெற வேண்டிய கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 23.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை குறித்து விவாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் <
காஞ்சிபுரத்தில், நிலம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாத மற்றும் தனி அடையாள எண் பெறாத 12,603 விவசாயிகளின் ஊக்கத்தொகை ஏப்ரல் மாதம் நிறுத்தப்படும் என கலெக்டர் கலைச்செல்வி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, விவசாயிகள் தொடர்ந்து பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெற, விரைவாக வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி தனி அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் (46), நேற்று (மார்.12) சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியில் உள்ள ‘தாய் சும்மிட் ஆட்டோபார்ட்ஸ்’ எனும் தொழிற்சாலைக்கு லோடு ஏற்ற சென்றுள்ளார். லோடை இறக்கி முடித்துவிட்டு, வாகனத்திலேயே படுத்து உறங்கியுள்ளார். வாகனத்தை எடுக்க சொல்லி, மற்றவர்கள் எழுப்பியபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது. லோடு ஏற்றிய களைப்பில் உயிரிழந்திருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 22655 விவசாயிகள் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறுகின்றனர். அதில் 10062 பேர் மட்டுமே நாளைய தேதி வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். இனிமேல், தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.