Kanchipuram

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

image

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தை (044-2723714, 044 – 27237124) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961963>>தொடர்ச்சி<<>>

News July 6, 2025

பெண்ணை கொலை செய்து நகைகள் கொள்ளை

image

காஞ்சிபுரம் மாவட்டம் செட்டியார்பட்டில் உள்ள அட்டை நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணை கொலை செய்து அவரது நகைகளை கொள்ளையடித்த சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. ஹெப்சிபா என்ற பெண்ணை இரும்பு ராடல் அடித்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அட்டை நிறுவனத்தில் பணிபுரிந்த செந்தில்நாதன் என்பவரை பொன்னேரிக்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News July 6, 2025

இலவச கண் பரிசோதனை முகாம்

image

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வரும் 13ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 98423 46046, 94432 69946, 97914 08768 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். அனுமதி இலவசம். ஷேர் செய்யுங்கள்

News July 6, 2025

காஞ்சியில் அமைப்பாளர் நியமனம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திமுக சார்பில் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளராக வழக்கறிஞர் இ எல் கே கண்ணன் திமுக சார்பில் திமுக மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சுந்தர் நியமித்தார். மேலும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கண்ணனுக்கு கட்சியின் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News July 5, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (05.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News July 5, 2025

சக்தி வாய்ந்த பெருமாள் கோயில்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோயில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோயில் 50 வது திவ்ய தேச கோயிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது. மேலும் கல்வி செல்வமும் பெருகும். தெரிந்தவகர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

News July 5, 2025

வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே<> இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (044-27237945) அழைக்கலாம். அனைவருக்கும் பகிரவும்.

News July 5, 2025

தொழிலாளர்களுக்கு ரூ.3,000 பென்ஷன் (1/2)

image

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்திய அரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <>இந்த லிங்க்<<>> மூலம் அப்ளை செய்து இ-ஷ்ரம் கார்டு பெறலாம். விபரங்களுக்கு HELP DESK 18008896811 மற்றும் மாவட்ட தொழிலாளர் நலத்துறையை தொடர்பு கொள்ளலாம். தினக்கூலி தொழிலாளர்களுக்கு அருமையான திட்டம். ஷேர் பண்ணுங்க. <<16949828>>தொடர்ச்சி<<>>

News July 5, 2025

இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம் (2/2)

image

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்று ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்திய அரசு திட்டங்களை பெற முடியும். உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!