India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர் ஒன்றியம் வைப்பூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெடா முனீஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வந்த நிலையில் பணிகள் முழுமை அடைந்த நிலையில் இன்று யாக சாலையில் பூஜைகள் செய்யப்பட புனித கலச நீரை ஸ்ரீஜெடா முனீஸ்வரன் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வாலாஜாபாத் அருகே லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வ/45 செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தவர். இவர் வழக்கம் போல் பணிக்கு இன்று காலை சைக்கிளில் வாரணவாசி பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (45). இவர் ஶ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருந்த முத்துக்குமரன் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் பிராமணர் அல்லாதவர் தேசிக பிரபந்தம் பாடக்கூடாது என மிரட்டும் தென்கலை பிரிவு பிராமணர்கள் குற்றச்சாட்டு. மேலும் தென் கலை பிராமணர்களின் செயலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து முகம் சுளிப்பு ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டின் நிலையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் காணவில்லை என ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு புகார் அளித்து விசாரணை மேற்கொண்டதில் கட்சிப்பட்டு பகுதியை சேர்ந்த வீரவேல் மற்றும் கருணாகரனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் ஆறு சட்டமன்றத்தை உள்ளடக்கிய தொகுதியில் திமுக சார்பில் செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் என 4 முனை போட்டியாக காஞ்சிபுரம் தொகுதி களம் காண்கிறது. நான்கு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோயில் தெருவில் இயங்கி வரும் ஸ்ரீ ஆதிசங்கரர்மழலையர் தொடக்கப்பள்ளியின் 21 ஆம் ஆண்டு விழா காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி பரிமளா அறிவழகன் செய்திருந்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு தேரடி அருகே வரும் திங்கள் அன்று மாலை 4 மணியளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் அவர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்த பிரச்சாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக சுந்தர் என்பவரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் படி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட பொழுது 82 வயது முதியவர் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என கோரிக்கை வைத்தார். உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைவில் கிடைக்கும் உத்தரவாதம் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.