Kanchipuram

News June 25, 2024

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஜூன் 27க்குள் காஞ்சிபுரம் மாவட்டம் வட்டார இயக்க அலுவலகங்கள் மூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News June 25, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து

image

காஞ்சி மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மூலவர் சாமி நகைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெறுவதால் பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94441-34000, 94442-12749, மதுவிலக்கு பிரிவில் வாட்ஸ் அப் எண்.82489-86885 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 22, 2024

போதையில் சாலையில் உறங்கிய நபரால் ட்ராபிக் ஜாம்

image

குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஜாரில் அமைத்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் ஒருவர் குடித்துவிட்டு அவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு அச்சாலையில் ஓரமாக சுமார் நான்கு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

News June 22, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 22, 2024

சிறுபான்மையினருக்கு கடன் திட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News June 21, 2024

காஞ்சி: “சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும்”

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 700 நாள்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக விமான நிலைய குழு அறிவித்த நிலையில், இதனை சட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மனு அளித்துள்ளார்.

News June 21, 2024

காஞ்சியில் கள்ளச்சாராயம் விற்ற 17 பேர் கைது

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த 17 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 162 கிலோ எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

News June 21, 2024

காஞ்சிபுரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாரய தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுத்திடும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.

News June 20, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

image

பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து ஜூன்.22 அன்று (சனிக்கிழமை) காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

error: Content is protected !!