Kanchipuram

News June 27, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் உத்திரமேரூர், குன்றத்தூர், திருப்பெரும்புதூர் போன்ற முக்கிய நகரங்களில் தண்ணீர் வெள்ளம்போல் தேங்கி , போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே வெளியே செல்பவர்கள் குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 26, 2024

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை 2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.யோகஜோதி உள்ளார். இதில் பருவமழையை எதிர்கொள்ள தாயர் குறித்து கூட்டம் நடைபெற்றது.

News June 25, 2024

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை 2024 முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெ.யோகஜோதி உள்ளார். இதில் பருவமழையை எதிர்கொள்ள தாயர் குறித்து கூட்டம் நடைபெற்றது.

News June 25, 2024

டி.ஆர்.பாலு எம்.பியாக பதவி ஏற்பு

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர் 8ஆவது முறையாக வென்றுள்ளார்.

News June 25, 2024

காஞ்சிபுரம் எம்.பி யாக செல்வம் பதவியேற்பு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் செல்வம் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வம், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் நல வாரியம்

image

கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் போன்றவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 25, 2024

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை ஜூன் 27க்குள் காஞ்சிபுரம் மாவட்டம் வட்டார இயக்க அலுவலகங்கள் மூலம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

News June 25, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் தரிசனம் ரத்து

image

காஞ்சி மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் மூலவர் சாமி நகைகளை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெறுவதால் பக்தர்களுக்கு மூலவர் தரிசனம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கு மேல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 24, 2024

கள்ளச்சாராயம் குறித்து புகார் தெரிவிக்கலாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் உற்பத்தி, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை நடைபெறுவது குறித்து தெரியவந்தால், பொதுமக்கள் நேரடியாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 94441-34000, 94442-12749, மதுவிலக்கு பிரிவில் வாட்ஸ் அப் எண்.82489-86885 என்ற எண்ணை அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 22, 2024

போதையில் சாலையில் உறங்கிய நபரால் ட்ராபிக் ஜாம்

image

குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஜாரில் அமைத்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் ஒருவர் குடித்துவிட்டு அவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு அச்சாலையில் ஓரமாக சுமார் நான்கு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

error: Content is protected !!