Kanchipuram

News June 30, 2024

காஞ்சிபுரத்தில் நாளை முதல் அமல்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து குற்றங்களை தடுக்கும் வகையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் அதிநவீன கேரமக்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்படுகிறது. அதன் முதல்கட்டமாக, மாகரல், உத்திரமேரூர் ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணிக்கப்பட உள்ளன. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

News June 29, 2024

குன்றத்துாரில் தெய்வ சேக்கிழார் விழா

image

குன்றத்துார் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை சார்பில் இன்று மாலை தெய்வ சேக்கிழார் விழா குன்றத்துாரில் உள்ள சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இதில், சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பட்டிமன்ற பேச்சாளர் பர்வின் சுல்தானா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News June 29, 2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய தனி வட்டாட்சியர் சத்யா – காஞ்சிபுரம் வட்டாட்சியராகவும், உத்திரமேரூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கருணாகரன் வாலாஜாபாத் வட்டாட்சியராகவும், வாலாஜாபாத் வட்டாச்சாரியாக பணிபுரிந்த சதீஷ் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியராகவும், வாலாஜாபாத் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பணியாற்றிய மலர்விழி குன்றத்தூர் வட்டாட்சியராகவும் மாற்றம் செய்து ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News June 29, 2024

எண்களை அறிவித்த மாவட்ட ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகில் உள்ள அனைத்து கடைகளிலும் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 272.530 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் 94440-42322, 94984-10581, 82489-86885 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 28, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் 

image

மாற்றுதிறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை 2023-2024 (31.3.2024 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களை, 30.06.2024 வரை 3 மாத காலத்திற்கு பயணம் நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News June 28, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த 223 கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெற, பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News June 28, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த 223 கிராமங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் பெற, பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News June 28, 2024

காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. இதில் 6 பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், கணிதவியல், வேதியியல், தாவரவியல், வணிகவியல்) பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டறங்கில் விவசாயிகள் நலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News June 27, 2024

சென்னையை அடுத்து காஞ்சியிலும் நாய்கள் தொல்லை

image

காஞ்சிபுரத்தில் 5 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் உதடு சிதைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையை தொடர்ந்து தற்போது காஞ்சிபுரத்திலும், இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதுகுறித்து அரசு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!